ஒண்ணும் இல்லை.. வீட்டுக்குப் பூட்டு எதுக்கு? துணை ஆட்சியருக்கு திருடன் கடிதம்!

robbery
robbery

பணம் இல்லாத நிலையில் வீட்டை எதற்காக பூட்டினீர்கள் என துணை ஆட்சியர் வீட்டிற்கு திருட வந்து ஏமாந்து போன திருடன் கடிதம் எழுதிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் திரிலோச்சன் கவுருக்கு சொந்தமான வீடு உள்ளது. கடந்த இரு வாரங்களாக வெளியூர் சென்றிருந்த அவர் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றார்.

அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடப்பதைக் கண்டார். உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து சம்பவம் நடந்த இடத்தில் சோதனை நடத்தினர்.

letter 2
letter 2

அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதை படித்து பார்த்த போலீஸாருக்கு ஆச்சரியமும் சிரிப்பும் வந்தது. அந்த கடிதத்தில் திருடன் துணை ஆட்சியர், அதாவது வீட்டின் உரிமையாளருக்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அதாவது பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே? என எழுதப்பட்டிருந்தது.

இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. திருடச் சென்ற வீட்டில் எதுவும் சிக்காததால் மன உளைச்சலுக்குள்ளானதால் இது போல் கடிதம் எழுதிவிட்டு சென்றது அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

அதிலும் அந்த திருடன் துணை ஆட்சியரின் நோட் பேட், பேனாவை கொண்டே எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

செப்டம்பர் 20ஆம் தேதி ஊருக்குச் சென்றுவிட்டு அக்டோபர் 9ஆம் தேதி வீடு திரும்பும் போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ 30 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

letter 1 1
letter 1 1

போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அந்த மாநிலத்தின் உயர் காவல் துறை அதிகாரிகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தனை காவல் துறை அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் தைரியமாக வந்து கொள்ளையடித்ததோடு கடிதம் எழுதி வைத்த சம்பவம் குறித்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories