WC 2023: இரு ஆட்டங்கள்: தோல்வியடைந்த பாகிஸ்தான், வங்கதேசம்!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
38ஆம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 11.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் வங்கதேசம், ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே புனேயில் பகல்நேர ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கொல்கொத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டுமே முக்கியத்துவம் இல்லாத ஆட்டங்கள்.

வங்கதேசம் vs ஆஸ்திரேலியா

          வங்கதேச அணியை (306/8, ஹிருதய் 74, ஷண்டோ 45, லிட்டன் தாஸ் 36, தசிட் ஹசன் 36, அப்பாட் 2/61, சாம்பா 2/32) ஆஸ்திரேலிய அணி (44.4 ஓவர்களில் 307/2, மிட்சல் மார்ஷ் 177*, ஸ்மித் 63*, வார்னர் 53) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. வங்கதேச அணி வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆடினர். ஆஸ்திரேலிய ஃபீல்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. வங்கதேச வீரர்கள் ஷண்டோ (45 ரன்), மகமதுல்லா (32 ரன்), நசும் அகமது (7 ரன்) ஆகிய மூவரையும் ரன் அவுட் செய்தனர். தவ்ஹித் ஹிருதய் 74 ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 306 ரன் எடுத்தது.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

          இரண்டாவதாக ஆடவந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 10 ரன்களில் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். வார்னர் 23ஆவது ஓவர் வரை விளையாடி 61 பந்துகளில் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மிட்சல் மார்ஷ் 9 சிக்சர், 17 ஃபோர்களுடன் 132 பந்துகளில் 177 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஸ்மித் 63 ரன்கள் எடுத்தார். இதனால் 44.4 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 307 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏழு தொடர் வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

இங்கிலாந்து vs பாகிஸ்தான்

          இங்கிலாந்து அணி (337/9, பென் ஸ்டோக்ஸ் 84, ஜோ ரூட் 60, ஜானி பெயர்ஸ்டோ 59, ரவுஃப் 3/64, அஃப்ரிதி 2/72, வாசிம் 2/74) பாகிஸ்தான் அணியை (43.3 ஓவர்களில் 244, ஆகா சல்மான் 51, பாபர் ஆசம் 38, ரிஸ்வான் 35, ஹரிஸ் ரவுஃப் 35, ஷகீல் 21, டேவிட் வில்லி 3/56, அதில் ரஷீத் 2/55, அட்கின்சன் 2/45, மொயின் அலி 2/60) 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

          பூவாதலையா வென்ற முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இங்கிலாந்து அணியின் முதல் 6 பேட்டர்கள் 47.2 ஓவர்கள் வரை ஆடினர். டேவிட் மலான் (31 ரன்), பெயர்ஸ்டோ (59 ரன்), ரூட் (60 ரன்), ஸ்டோக்ஸ் (84 ரன்), பட்லர் (27 ரன்), ப்ரூக் (30 ரன்) ஆகியோ சிறப்பாக ஆடி 47.2 ஓவரில் 308 ரன்கள் சேர்த்தனர். எனவே 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கட் இழப்பிற்கு 37 ரன் எடுத்தது.

          பின்னர் ஆடவந்த பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அப்துல்லா ஷபீக் வில்லியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஃபகர் ஜமான் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். பாபர் ஆசம் மற்றும் ரிஸ்வான் ஜோடி இணைந்து சிறிது ரன் சேர்த்தனர். ஆனால் பாபர் ஆசம் (38 ரன்) 14ஆவது ஓவரிலும் ரிஸ்வான் (36 ரன்) 23ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்களில் ஆகா சல்மான் (51 ரன்) சுறுசுறுப்பாக ஆடினார். கடைசி மூன்று வீரர்கள் வீசப்பட்ட அத்தனை பந்துகளையும் அடித்தனர். அதனால் கடைசி விக்கட்டுக்கு 53 ரன் பார்ட்னர்ஷிப் கூட வந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 244 ரன் எடுத்தது, இதனால் இங்கிலாந்து அணி 93 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

          இங்கிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளும் இந்த ஆட்டத்தின் முடிவால் எந்தவிதப் பயனும் பெறப்போவதில்லை. இங்கிலாந்து அணி 337 ரன் அடித்தபோதே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. நாளை, லீக் ஆட்டங்களின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவும் நெதர்லாந்து அணியும் விளையாடுகின்றன. இதுவும் முக்கியத்துவம் இல்லாத ஆட்டம். இந்தியா ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றி பெறுகிறதா எனப் பார்க்கவேண்டும். இந்திய அணி இதுவரை ஆடாத வீரர்களை விளையாட வைத்துப் பார்க்கலாம்.

          முதல் அரையிறுதி ஆட்டம் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15ல் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையே கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories