January 19, 2025, 9:15 AM
25.7 C
Chennai

வனப் பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய அதிரடி தடை: இது கேரள அரசின் புது முடிவு

கேரள வனப் பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய அதிரடி தடை விதித்துள்ளது கேரள அரசு. தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றம் சென்ற 36 பயணிகளில் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து, கேரள அரசு இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி வனப்பகுதி, சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் இடமாக இருந்தது. இங்கே, சென்னையில் இருந்து 24 பேரும், ஈரோடு, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 12 பேரும் மலையேற்றம் சென்றனர். இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதி. இந்த வனப்பகுதியில் பயணிகள் குழு மலைஏற்றம் செய்துவிட்டு இறங்கும் போது, திடீரெனப் பற்றிய காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர்.

ஆனால், திடீரெனப் பற்றிய இந்தக் காட்டுத் தீயில் இருந்து எப்படி தப்பிப்பது எனத் தெரியாமல், பதற்றத்தில் மலை இடுக்குகளில் குதித்து மேற்கொண்டு செல்ல இயலாமல் தீவிபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதை அடுத்து அங்கு நடந்த தீவிர மீட்புப்பணிக்குப் பின் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மீட்புப் பணியில் தமிழக வனத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றோடு கேரள வனத்துறையும் இணைந்து மேலும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ:  அரசு மதுபானக் கடைகளில் முதல்வர் படம்; பாஜக., கோரிக்கை!

இந்நிலையில் கேரள அரசு இன்று அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. கேரள வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு தடை விதித்ததுடன், மலை ஏற்றம் செல்பவர்கள், இயற்கை பயணத்தை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் இனி அனுமதி இல்லாமல் கேரள வனப்பகுதிக்குள் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.