இந்திரா காந்தியின் உயிர்த் தியாகத்தை மறக்க முடியாது: மோடி உருக்கம்

Published:

புது தில்லி:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த நாட்டுக்காக செய்த உயிர்த் தியாகத்தை மறந்துவிட முடியாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்திராவின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், இன்று காலை டெல்லியில் நடைபெற்ற ஒருமைப்பாட்டுக்கான ஓட்டம் நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்த அவர் ‘இதே நாளில், இந்த நாட்டுக்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி செய்த உயிர்த் தியாகத்தை மறந்துவிட முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

தில்லியில் உள்ள இல்லத்தில் கடந்த 31-10-1984 அன்று இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலில் பாய்ந்த 30 தோட்டாக்களில் 23 உடலை துளைத்து, வெளியேறின. ஏழு தோட்டாக்கள் உடலிலேயே தங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img