கூட்டணியில் இருந்து விலக நேரிடும் : பா.ஜ.க.வுக்கு சிவசேனா எச்சரிக்கை

Published:

 

பாஜக கூட்டணியில் இருந்து விலகவும் தயங்கமாட்டோம் என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

பல வருடங்களாக கூட்டணியிலிருந்த பாஜகவும் சிவசேனா கட்சியும், மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன. அந்தத் தேர்தலுக்குப் பின் இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது

இதற்கிடையில், நேற்று ஒரு விழாவில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே “பாஜக தொடர்ந்து அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறது. இது நீடித்தால் பாஜக கூட்டணியில் இருந்து விலகவும் தயங்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய சிவசேனாவைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே “அரசு எந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. மேலும் சிவசேனா தொண்டர்களையும் நசுக்குகிறது. இதையெல்லாம் இனிமேல் நாங்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img