11 ஆவிகள் வெளியேற 11 குழாய்கள்? தில்லி கூட்டு மரணத்தில் குழப்பும் புதிர்!

burari family - 2026

தில்லியில் கூட்டு மரணத்தை தேர்ந்தெடுத்த வீட்டின் பின்புறத்தில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, 11 ஆவிகள் வெளியேற 11 குழாய்கள் பதிக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுவதால், இந்த விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வீட்டில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கடிதங்களும் டைரிகளும் சிக்கின. வீட்டின் உள்ளே 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். ஏதோ ஒரு மதச் சடங்கை மேற்கொள்வதற்காக இவர்கள் இவ்வாறு தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை வைத்து போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தில்லி புராரியில் நடந்த இந்தச் சம்பவத்தில், 11 பேரில் 7 பேர் பெண்கள். குடும்பத்தின் மூத்த பெண்மணி 77 வயதான நாராயன் தேவி தரையில் கிடந்துள்ளார். மற்ற அனைவரும் தூக்கில் தொங்கியுள்ளனர்.

நாராயன் தேவியின் மகள் பிரதீபா (57), மகன்கள் பவ்னேஷ் (50) லலித் பாடியா (45) அவர்களது குடும்பத்தினர், பவ்னேஷின் மனைவி சவீதா(45) அவர்களது மகள்கள் மீனு (23) நோட்ஜி (25) துருவ் (15), லலித் பாடியாவின் மனைவி டினா (42), ,மகன் ஷிவம் (15) ஆகியோர் தூக்கில் தொங்கியுள்ளனர்.

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

பிரதீபாவின் பெண் ப்ரியங்கா (33) கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. தனது திருமணம் குறித்து எதிர்பார்ப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐ.டி., நிறுவனப் பணியாளரான அவரும் தூக்கில் தொங்கியுள்ளார்.

எவ்வாறு தற்கொலை செய்து கொண்டால் சொர்க்கத்தை அடையலாம், என்ன செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றெல்லாம் எழுதி வைத்துள்ள குறிப்புகள் போலீஸாரின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. போலீஸாரிடம் சிக்கிய முதல் குறிப்பில், எந்த நாளில், எப்படி சாக வேண்டும் என்றும் விவரமாக எழுதியுள்ளனர்.

11 holes in a house - 2026

இந்த நிலையில் அந்த வீட்டில் சோதனை நடத்திய போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒன்று கண்ணில் பட்டுள்ளது. அந்த வீட்டுக்குப் பின் புறத்தில் 11 குழாய்கள் வெளியே வருவதைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த போலீஸார், மொத்தமாக 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் முடிந்துள்ளதைக் கண்டனர்.

இந்தக் குழாய்களும் உள் பக்கம் எதனுடனும் இணைக்கப்படவில்லை. அதேபோல் வெளியேயும் எதனுடனும் இணைக்கப்படவில்லை. 11 பேரும் உயிரிழந்து கிடந்த அறைக்கு அருகில் இந்தக் குழாய்கள் தொடங்கி வெளிப்பக்கம் வரை வந்துள்ளன. எனவே, இது எதோ கண்டிப்பாக ஒரு நம்பிக்கை காரணமாக வைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

அங்கே கிடந்த குறிப்புகளில், அந்த வீட்டில் இறந்த 11 பேரின் ஆவியும் வெளியே மோட்சத்துக்குச் செல்ல இந்தக் குழாய்கள் உதவும் என்று குறிப்பிடப் பட்டிருந்ததாம்.  இருப்பினும் போலீஸார் இதுகுறித்து மேலும் அதிகமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அங்கே ஒவ்வொன்றும் மர்மமானதாக இருப்பதால் போலீஸார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

போலீஸார் இந்த விவகாரத்தை தற்கொலை என்று கருதுகின்றனர். இருப்பினும், இதனை கொலை என்று கூறுகின்றனர் மற்ற உறவினர்கள். இந்நிலையில் அருகில் உள்ளோர், அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும், எந்த வித பொருளாதார நெருக்கடியோ, கடனோ இல்லாத குடும்பத்தினர் என்பதால், தற்கொலைக்கு வழி இல்லை என்று கருதுகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் ஏதோ மதச் சடங்கின் பின்னணியில் இருப்பதால், இது தற்கொலையாக இருக்கக் கூடும் என்றும் கருதப் படுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories