11 ஆவிகள் வெளியேற 11 குழாய்கள்? தில்லி கூட்டு மரணத்தில் குழப்பும் புதிர்!

burari family - 2026

தில்லியில் கூட்டு மரணத்தை தேர்ந்தெடுத்த வீட்டின் பின்புறத்தில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, 11 ஆவிகள் வெளியேற 11 குழாய்கள் பதிக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுவதால், இந்த விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வீட்டில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கடிதங்களும் டைரிகளும் சிக்கின. வீட்டின் உள்ளே 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். ஏதோ ஒரு மதச் சடங்கை மேற்கொள்வதற்காக இவர்கள் இவ்வாறு தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை வைத்து போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தில்லி புராரியில் நடந்த இந்தச் சம்பவத்தில், 11 பேரில் 7 பேர் பெண்கள். குடும்பத்தின் மூத்த பெண்மணி 77 வயதான நாராயன் தேவி தரையில் கிடந்துள்ளார். மற்ற அனைவரும் தூக்கில் தொங்கியுள்ளனர்.

நாராயன் தேவியின் மகள் பிரதீபா (57), மகன்கள் பவ்னேஷ் (50) லலித் பாடியா (45) அவர்களது குடும்பத்தினர், பவ்னேஷின் மனைவி சவீதா(45) அவர்களது மகள்கள் மீனு (23) நோட்ஜி (25) துருவ் (15), லலித் பாடியாவின் மனைவி டினா (42), ,மகன் ஷிவம் (15) ஆகியோர் தூக்கில் தொங்கியுள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

பிரதீபாவின் பெண் ப்ரியங்கா (33) கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. தனது திருமணம் குறித்து எதிர்பார்ப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐ.டி., நிறுவனப் பணியாளரான அவரும் தூக்கில் தொங்கியுள்ளார்.

எவ்வாறு தற்கொலை செய்து கொண்டால் சொர்க்கத்தை அடையலாம், என்ன செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றெல்லாம் எழுதி வைத்துள்ள குறிப்புகள் போலீஸாரின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. போலீஸாரிடம் சிக்கிய முதல் குறிப்பில், எந்த நாளில், எப்படி சாக வேண்டும் என்றும் விவரமாக எழுதியுள்ளனர்.

11 holes in a house - 2026

இந்த நிலையில் அந்த வீட்டில் சோதனை நடத்திய போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒன்று கண்ணில் பட்டுள்ளது. அந்த வீட்டுக்குப் பின் புறத்தில் 11 குழாய்கள் வெளியே வருவதைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த போலீஸார், மொத்தமாக 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் முடிந்துள்ளதைக் கண்டனர்.

இந்தக் குழாய்களும் உள் பக்கம் எதனுடனும் இணைக்கப்படவில்லை. அதேபோல் வெளியேயும் எதனுடனும் இணைக்கப்படவில்லை. 11 பேரும் உயிரிழந்து கிடந்த அறைக்கு அருகில் இந்தக் குழாய்கள் தொடங்கி வெளிப்பக்கம் வரை வந்துள்ளன. எனவே, இது எதோ கண்டிப்பாக ஒரு நம்பிக்கை காரணமாக வைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

அங்கே கிடந்த குறிப்புகளில், அந்த வீட்டில் இறந்த 11 பேரின் ஆவியும் வெளியே மோட்சத்துக்குச் செல்ல இந்தக் குழாய்கள் உதவும் என்று குறிப்பிடப் பட்டிருந்ததாம்.  இருப்பினும் போலீஸார் இதுகுறித்து மேலும் அதிகமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அங்கே ஒவ்வொன்றும் மர்மமானதாக இருப்பதால் போலீஸார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

போலீஸார் இந்த விவகாரத்தை தற்கொலை என்று கருதுகின்றனர். இருப்பினும், இதனை கொலை என்று கூறுகின்றனர் மற்ற உறவினர்கள். இந்நிலையில் அருகில் உள்ளோர், அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும், எந்த வித பொருளாதார நெருக்கடியோ, கடனோ இல்லாத குடும்பத்தினர் என்பதால், தற்கொலைக்கு வழி இல்லை என்று கருதுகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் ஏதோ மதச் சடங்கின் பின்னணியில் இருப்பதால், இது தற்கொலையாக இருக்கக் கூடும் என்றும் கருதப் படுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories