ஆதார் உதவி எண் 18003001947 மொபைலில் பதிவாக கூகுளே காரணமாம்!

aadhar card1 - 2026

புது தில்லி : ஆதார் சேவை வழங்கி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனம் UIDAI – உடாய் மைய சேவை உதவி எண் 18003001947, ஆண்ட்ராய்டு போன்களின் போன்புக்கில் தானாக பதிவாகியுள்ளது என்றும், இது ஹேக்கர்களின் எண் என்றும் உடனே இதை டெலிட் செய்யவேண்டும் என்றும் நேற்று திடீரென சர்ச்சை எழுந்தது.

சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் போன்களில் இவ்வாறு தானாக ஆதார் மைய பழைய உதவி எண் 18003001947 பதிவாகி இருப்பதாக, போன் புக் ஸ்க்ரீட் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மொபைல் போன்களுடன் ஆதார் ஆணையம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், எனவே தான் அது தானாக  பதிவானதாக சிலர் விமர்சனம் செய்தனர்.  ஆனால் இதனை ஆதார் ஆணையம் மறுத்தது.

1947 என்ற எண் மட்டுமே தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும், உதவி எண்களை பதிவிடுமாறு எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தையும் தாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தது. இது குறித்த தகவல்கள் நேற்று ஊடகங்களில் பலத்த விவாதத்தைக் கிளப்பின.

இந்நிலையில் ஆதார் உதவி எண்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவானதற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்கும் கூகுளே காரணம் என்று கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்தது. தங்களது இந்தச் செயலுக்காக கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் 2014இல் உடாய் சேவை எண்ணும் 112 என்ற பேரிடர் உதவி எண்ணும் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின்  setup wizardல் கோடிங் செய்யப்பட்டதாகவும், இது கவனக் குறைவால் நேர்ந்த பிழை என்றும் குறிப்பிட்டுள்ள கூகுள் நிறுவனம், தற்போது வரை இது தொடர்வதகாவும் தெரிவித்துள்ளது.

1800 uiadi - 2026

மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள கூகுள் நிறுவனம், பயனாளர்களின் ஆண்ட்ராய்டு கருவிகளில் அங்கீரிக்கப்படாத எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என உறுதி கூறுவதாகவும் இன்னும் சில வாரங்களில் இப்பிரச்சினை சீர் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த எண் ஹெக்கர்களால் பதிவு செய்யப் படுவதாகவும்,  இந்த எண்ணை உங்கள் மொபைல் போன்களில் செக் செய்து, அப்படி இருந்தால் உடனே டெலிட் செய்துவிடுங்கள், இது உங்கள் போன்களில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுத்து திருடிவிடும் என்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories