உலக மலையாளிகள் ஒரு மாத சம்பளத்தை அளிக்க பிணரயி விஜயன் வேண்டுகோள்!

Published:

binarayi vijayan - 2026

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்தை மறுசீரமைக்க உலகம் முழுவதிலும் வாழும் மலையாள மக்கள் ஒன்று சேர வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலையாள மக்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்க வேண்டும். இயற்கை பேரிடரால் உருக்குலைந்த கேரளாவை புதிதாக கட்டமைக்க மலையாள மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நமது பலத்தை உணர வேண்டிய நேரம் இது. ஒரு மாத சம்பளத்தை வழங்குவது என்பது கடினமான விஷயம் தான். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் கேரளா மக்கள் முதலில் 3 நாட்கள் சம்பளத்தை வழங்க முடியும். அடுத்த 10 மாதங்களுக்கு மீதமுள்ள தொகையை நிதியாக அளிக்க முடியும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img