April 27, 2025, 1:18 PM
34.5 C
Chennai

ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது: மோடி வாழ்த்து!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (‘இஸ்ரோ) அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக ‘ஜிசாட்-29’ என்ற செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் நவ.14 புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தில் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக 3,423 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 ராக்கெட் மூலம் மாலை 5:08க்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

சென்னையை புயல் தாக்கும், வானிலை மோசமாக இருக்கும் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி ராக்கெட் ஏவப் படும் என்று கூறியிருந்தது இஸ்ரோ. அதன்படி, இந்த ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன், செவ்வாய்க்கிழமை நேற்று மதியம் 2:50க்கு தொடங்கியது.

ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். 3423 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட் 29 உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திராயன் விண்கலத்திலும் ஜிஎஸ்எல்வி மாக் 3 தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 3 ஆணடுகளில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் மூலம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சேவை வழங்கப்பட உள்ளது.

ALSO READ:  IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

சுதந்திர தினத்தன்று கங்கயான் திட்டத்தை அறிவித்து பிரதமர் நமக்குப் பெரிய பரிசு வழங்கினார். இதற்கான குழு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பணிகள் நடந்து வருகின்றன. 2020 டிசம்பருக்குள் கங்கயான் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான முழுத் திறனும் இஸ்ரோவுக்கு உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து:

இந்நிலையில், ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் டிவிட்டரில் இது குறித்து தெரிவித்த போது, ஜிசாட் 29 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மாக் 3 டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்தியாவில் உருவாக்கப்பட்ட வாகனம் மூலம், பெரிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக பிரிக்கப் பட்டது:

ALSO READ:  மதுரை மண்டலத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம்! இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்3 டி2 ராக்கெட், ஜிசாட் 29ஐ வெற்றிகரமாக சுமந்து சென்றது. ஏவப்பட்ட 17 நிமிடங்கள் கழித்து, ஏவு வாகனம் ஜிசாட் செயற்கைக்கோளை புவிவட்டப்பாதையில் வெளியே செலுத்தியது. ஹசனில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயற்கைக்கோள் கண்காணிக்கப் பட்டு வருகிறது… என்று இஸ்ரோ அறிக்கை வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

Entertainment News

Popular Categories