டிச.18இல் வைகுண்ட ஏகாதசி: ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்!

08 June24 Tirupathi - 2026

திருப்பதி: டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

அடுத்த மாதம் 18 ஆம் தேதி வைணவ சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி திருநாள் வருகிறது. வைகுண்ட ஏகாதசி நாளன்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்து கோவிலில் உள்ள சொர்க்கவாசல் பிரவேசம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலைக்கு வருகின்றனர்.

இந்த ஆண்டும் அதே போல் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தேவஸ்தான நிர்வாகம் எதிர்பார்க்கிறது. எனவே வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பதி மலையிலுள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேவஸ்தானத்தில் உள்ள பல்வேறு துறைகளில் தலைமை அதிகாரிகள், விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசராஜு, டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி புண்ணிய தினத்தில் அன்று அதிகாலை 12.30க்கு ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். வைகுண்ட ஏகாதசி தினமான டிசம்பர் 18, துவாதசி தினமான டிசம்பர் 19 ஆகிய இரண்டு நாட்களும் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.

18ஆம் தேதி அதிகாலை 1.30 மணி முதல் மிக முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் காலை 4 மணி முதல் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 18, 19 ஆகிய இரண்டு நாட்களும் திருப்பதி மலைப்பாதையில் 24 மணி நேரமும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் சென்று அமர்ந்து காத்திருக்க அனுமதி அளிக்கப்படும். வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் நிறைந்த பின் மற்ற பக்தர்களை திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டம், மாட வீதிகள் ஆகியவற்றில் அமைக்கப்படும் தற்காலிக ஷெட்டுகளில் தங்க வைக்கப்படுவார்கள்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வரும் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் ஆகியோர் தங்களுக்கான தரிசன அனுமதி சீட்டுகள், தங்கும் அறைகள் ஆகியவற்றை பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ் பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு கவுண்டர்களில் நேரடியாகப் பெற்று கொள்ள வேண்டும்.

முக்கிய பிரமுகர்களில் அமைச்சர்கள் தவிர வேறு யாருக்கும் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட மாட்டாது. அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக அதிக பட்சம் ஆறு டிக்கெட்டுகளும், மற்ற முக்கிய பிரமுகர்களுக்கு அதிகபட்சம் 4 டிக்கெட்டுகளும் மட்டுமே வழங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகியவற்றை முன்னிட்டு அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் இருபதாம் தேதி வரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கான முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்வாமி தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள், வரிசைகள் ஆகியவற்றில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை தேவைகளும் தங்கு தடை இன்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன… என்று கூறினார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் தலைமை அதிகாரி கோபிநாத் ஜெட்டி மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories