ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு அச்சடித்த 10 பேர் ஆந்திராவில் கைது!

2000rupeenote - 2026

திருப்பதி:2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது செய்யப் பட்டனர். திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, 10 லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள், 19.22 காரட் வைரம், கலர் பிரிண்டர், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருப்பதி குற்றத்தடுப்பு காவல் நிலைய போலீசார் நேற்று காலை திருப்பதி ஆர்.சி ரோடு பகுதியில் உள்ள யுனிமணி நிதி நிறுவனம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் காணப்பட்ட அனந்தப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அத்தர் முகமது அலி, முகமது காஜா இம்ரான் ஆகியோரை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது ஐந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர். அப்போது நாங்கள் வைர வியாபாரம் செய்பவர்கள். எங்களிடம் வைரம் வாங்கியவர்கள் போலி 2000 ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாற்றிவிட்டனர் என்று புகார் கூறினர்.

இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இரண்டு பேரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள நெடமலூருக்கு சென்ற போலீசார் அங்கு நாராயணா காலணியில் இருக்கும் அப்பார்ட்மென்ட் ஒன்றில் சோதனை நடத்தினர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

அங்கு பதுங்கியிருந்த ராஜமுந்திரியை சேர்ந்த நவநீத குமார், விஜயவாடாவை சேர்ந்த பாலகுமார், பவன் குமார், விசாகப் பட்டினத்தை சேர்ந்த பாபு நாயுடு, வர்மா, தர்மாவரத்தை சேர்ந்த மோகன், கிருஷ்ணா மாவட்டம் மயிலவரத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணா, சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சரண்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள், 5 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 19.22 கேரட் வைர கற்கள், ஒரு கலர் பிரிண்டர், இரண்டு லேப்டாப்புகள், கள்ள நோட்டுகளை அச்சடிக்க தேவையான காகிதங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திருப்பதி எஸ் பி அன்பு ராஜன், கள்ள நோட்டுகள் அச்சிடப்பட்டு விவகாரத்தில் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள், 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர கற்கள் ஆகிவை உட்பட கள்ள நோட்டுகள் அச்சிட பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறோம் என்று கூறினார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories