பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது… இது செயலில் இறங்கும் நேரம்! ஆவேசப்பட்ட மோடி!

modi photo - 2026

புது தில்லி: பாகிஸ்தானுக்கு இதுவரை பேச்சுவார்த்தைக்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து விட்டது,. இனி உலக நாடுகளுடன் இணைந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இது செயலில் இறங்குவதற்கான நேரம் என ஆவேசத்துடன் கூறினார் பிரதமர் மோடி!

அர்ஜெண்டினா அதிபர் மௌரிசியோ மேக்ரி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அவர்களுக்கு இடையேயான சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையேயான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதன் பின்னர் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 75 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த ஆண்டில் ஜி20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. இதனை அர்ஜென்டினா அதிபர் அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பயங்கரவாதம் மிகப் பெரும் அசு்சுறுத்தலாக உள்ளதை நானும் அதிபர் மேக்ரியும் ஒப்புக் கொண்டுள்ளோம்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

புல்வாமாவில் நடந்த கொடூரமான தாக்குதலின் மூலம் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்து விட்டது. இனி பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. இது செயல்பாட்டில் இறங்குவதற்கான நேரம்.

ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்திற்கு எதிராக இப்போது ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்க தயங்குவது, பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கு சமம் என்று பேசினார்.

இது குறித்து டிவிட்டர் பதிவுகளில் பல கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று..

பிஎம் சார்… அடுத்த நாடுகளின் உதவியைக் கேட்பதை எப்போது இந்தியா நிறுத்தப் போகிறது? ஒசாமா பின் லேடனைக் கொல்லப் போகும் போது அமெரிக்கா இப்படித்தான் அடுத்த நாடுகளின் உதவியைக் கேட்டதா? ஒவ்வொரு முறை எதிரிகளைக் கொல்லப் போகும் போதும் இஸ்ரேல் இப்படித்தான் அடுத்த நாடுகளிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறதா? உங்களுக்கு நாட்டின் 125 கோடி மக்களின் ஆதரவு இருக்கும் போது ஏன் அடுத்தவர்களின் உதவிகளைக் கோரிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுபியுள்ளார் ஒருவர்.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories