பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அனைத்து வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்திவிட்டது!
வியாழக்கிழமை இன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விதமான வர்த்தக வழிகளையும் அடைத்து விடுவதாகவும் அனைத்து வித வர்த்தகங்களையும் நிறுத்தி விடுவதாகவும் இந்தியா கூறியுள்ளது
இதற்குக் காரணம் இந்த வர்த்தக வழிகளிலெல்லாம் ஆயுதக் கடத்தலும் போதை மருந்து கடத்தலும் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் எல்லை தாண்டி கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளதாக இந்திய அரசு கூறியுள்ளது
இந்த வர்த்தக பாதை இயல்பாக இரு நாடுகளுக்கும் இடையே பொருள்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரு நாடுகளிலும் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் வியாபாரிகளுக்கு பயன்படும் வகையில் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன!
ஆனால் பாகிஸ்தான் இந்த வழிகளில் ஆயுத கடத்தலுக்கும் சட்டவிரோத பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துவதால் இந்த அதிரடி முடிவை இந்தியா எடுத்துள்ளது!
மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளது! அதன்படி நாளை முதல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வந்த வழிகளெல்லாம் அடைக்கப்படுகின்றன! இரண்டு செக்போஸ்ட்கள் சம்பத் யூரி பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஸலாபாத் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சக்கன் தா பாக் ஆகிய இரு சோதனைச் சாவடிகளில் வழியே வர்த்தக ரீதியான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன
இதில் வாரத்துக்கு நான்கு நாட்கள் பூஜ்ஜியம் சுங்க வரியில் பொருள்கள் கொண்டு வரப்பட்டன~ இந்நிலையில் இந்த தடையை அடுத்து இந்த வர்த்தக பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொருள்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படுவது இனி சோதனை செய்யப்படும் என்று தெரிகிறது!
VERY USEFUL DICISISON.
OTHER BODERS WITH BAGALADES AND MYANMAR ALSO MUST BE SEALD OFF…