குஜராத்தில் அதிர்ச்சி: அவர் என்ன ஹிட்லரா..? ஹர்த்திக் படேல் கன்னத்தில் அறைந்த நபர்!

hardikpatel - 2026

குஜராத்தில் திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஹர்திக் படேல் கன்னத்தில் ஒருவர் பளாரென அறைந்து சில கேள்விகளை எழுப்பினார். அந்த நபரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்க, போலீஸார் மிகவும் சிரமப் பட்டு, அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் பகுதியில் காங்கிரஸில் அண்மையில் தன்னை இணைத்துக் கொண்ட, அண்மைக்கால குஜராத் சாதிக் கலவரங்களுக்குக் காரணகர்த்தாவாகத் திகழும் படேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மேடைமேல் ஏறிய ஒருவர், ஹர்திக்கின் கன்னத்தில் பலமாக அறைந்தார். உடனே அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அவரைப் பிடித்து நையப் புடைத்தனர். அவர்களின் பிடியில் இருந்து அந்த நபரைக் காப்பாற்ற போலீஸார் திக்குமுக்காடினர். ஒருவழியாக அந்த நபரை மீட்ட போலீஸார், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீஸாரின் விசாரணையில், அந்த நபரின் பெயர் தருண் கஜ்ஜார் என்று தெரியவந்தது.

அவர் போலீஸாரிடம் தான் ஏன் ஹர்திக்கை தாக்கினேன் என்பது குறித்து தகவல் தெரிவித்த போது, ‘கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற படேல் சமூகப் போராட்டத்தின்போது, என் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்திருந்தேன். இவரின் போராட்டத்தால் ஆமதாபாத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் என் குழந்தைக்கு மருந்து வாங்கமுடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டோம். அன்றே ஹர்திக் கன்னத்தில் ஓர் அறை விட்டு அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவுசெய்தேன்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

இவரால்தான் குஜராத் அமைதி இழந்தது. அன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் இயங்கவில்லை. இவர் நினைத்தால் குஜராத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் அடைத்துவிடுகிறார். யார் இவர்? குஜராத்தின் ஹிட்லரா?’ என கடுமையாக திட்டித் தீர்த்தார் தருண் கஜ்ஜார்.

குஜராத்தில் பட்டிதார் சமூகத்தை சேர்ந்தோருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி தந்தவர் ஹர்திக் படேல். அண்மையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவரை தேர்தலில் போட்டியிடச் செய்வதற்காக காங்கிரஸ் முயன்றது. ஆனால், இவர் மீதுள்ள கிரிமினல் குற்றச்சாட்டுகளால், நீதிமன்றம் இவர் தேர்தலில் போட்டி யிடுவதைத் தடை செய்தது. எனவே, காங்கிரஸுக்காக குஜராத்தில் இவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

harthikpatel twitterpage - 2026

இதனிடையே இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் பாஜக., பிரமுகர் என்று சில செய்தி தளங்கள் பதிவு செய்தன. அதே நேரம் இவர் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்றும், ஒரு பரபரப்புக்காக இவ்வாறு நாடகம் மேற்கொள்ளப் பட்டது என்றும், தன்னை அடித்தாலும் தான் ஒன்றும் புகார் மனு கொடுக்கப் போவதில்லை என்று ஹர்த்திக் படேல் கூறியிருந்ததாகவும், ஆனால் அதை மீறி ஹர்த்திக் போலீஸில் புகார் அளித்துவிட்டதாகவும் சமூகத் தளங்களில் செய்திகள் உலா வந்தன. எப்படி இருப்பினும் இன்று பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாகவே இது அமைந்துவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories