பாகிஸ்தானை எச்சரித்த மோடி: எங்கள் அணுகுண்டுகள் தீபாவளிக்கு வெடிப்பதற்காக வைத்திருக்கவில்லை!

Modi - 2026

பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு அச்சப்படும் நிலையை இந்தியா நிறுத்திவிட்டது. பாகிஸ்தான் எப்போதும் எங்களிடம் அணுகுண்டு இருக்கிறது என கூறிவருகிறது. இந்தியா வைத்திருப்பது மட்டும் என்ன? தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டை வைத்திருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி.

மேலும், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அப்போதைய (1972) காங்கிரஸ் அரசு தவறவிட்டது… என்று கூறினார் பிரதமர் மோடி.

பார்மரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 1972ம் வருட போரின் போது, நம்மிடம் சிறைப்பட்ட 90ஆயிரம் போர்க் கைதிகளை, காஷ்மீர் பிரச்னையைத் தீர்த்துவிட்டு பின்னர் ஒப்படைத்திருக்க வேண்டும். அப்போதைய காங்கிரஸ் அரசு சர்வதேச அழுத்தத்துக்கு அடிபணிந்து, நல்ல வாய்ப்பை கோட்டை விட்டது.

1971ம் வருட போரின் போது, பாகிஸ்தானின் பெரும் பகுதி நிலம் நம்வசம் இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் நம் கைக்குள் இருந்தது. இந்திய ராணுவம் அனைத்தையும் திட்டமிட்டு சரியாக வசப்படுத்தியிருந்தது. ஆனால், அந்த அருமையான வாய்ப்பை காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் காங்கிரஸ் அரசு பயன்படுத்தாமல் கோட்டை விட்டது… என்று கூறினார் மோடி.

அந்த வாய்ப்பை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி தீர்வு கண்டிருந்தால், பாகிஸ்தானால் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய பேராபத்துக்களை நாம் தவிர்த்திருக்கலாம். காங்கிரஸுக்கு எப்போதுமே தேசியவாதம் என்பது ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை.

வெறுமனே எங்களிடமும் அணு ஆயுதம் உள்ளது என்று மிரட்டும் பாகிஸ்தானின் மிரட்டலை இந்தியா ஒரு போதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது. நாங்கள் உங்கள் மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டினால்…? நாம் என்ன செய்வோம்..?! நாம் என்ன நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக்கிறோம்?! என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி!

மேலும், பாலாகோட் பதிலடி, 2016ல் மேற்கொள்ளப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக்.. ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நாம் என்ன பாகிஸ்தானுடன் அறிவிக்கப் பட்ட போரையா தொடுத்தோம்?! இதுதான் வலிமையான அரசு என்பது! நாம் பயங்கரவாதிகளுக்கு பயத்தை தோற்றுவித்திருக்கிறோம்… என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories