December 6, 2025, 8:29 PM
26.8 C
Chennai

எதிர்க்கட்சி அந்தஸ்து கேட்கமாட்டோம்! பாஜக.,வை கலங்கடிக்க 52 பேர் போதும்! : காங்கிரஸ் உறுதி!

rahul gandhi - 2025

தேவைப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெறுகின்ற வரை, நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்கப் போவதில்லை என்று கூறியுள்ளது காங்கிரஸ்.

இரண்டாவது முறையாக மோதி பிரதமர் பதவி ஏற்ற கையுடன் தனது அமைச்சரவை சகாக்களின் மூலம் தொய்வின்றி பணிகளைத் தொடங்கி விட்டார். அதே நேரம், தாங்கள் சந்தித்த படுதோல்விக்குப் பின்னர், காங்கிரஸ் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவராக பலரது பெயர்கள் அடிபட்ட போதும், இந்த முறை சோனியா காந்தியே தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில், போதிய உறுப்பினர் பலம் இல்லாததால், காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோராது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது

மக்களவையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 52 உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை ஒரு கட்சி பெற வேண்டுமானால், குறைந்த பட்சம் 54 உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அதற்கு 2 உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வதந்தி பரவியது.. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காங்கிரஸுடன் தனது கட்சியை இணைத்து, அந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரலாம் என்ற பேச்சு உலவியது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, எங்களிடம் 2 உறுப்பினர்கள் குறைவாக உள்ளதால் நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்கப் போவதில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கான 54 உறுப்பினர்களாக எங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ளும் வரை நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்க மாட்டோம்.

இந்தப் பொறுப்பை நாங்கள் அரசுக்கே விட்டு விடுகிறோம். எதிர்க் கட்சித் தலைவரை நியமிப்பதா வேண்டாமா என்ற முடிவை அரசே எடுக்கட்டும் என்றார்.

இதனிடையே, மக்களவையில் பாஜக.,வினரை ஒப்வொரு நாளும் கேள்விகள் கேட்டு திணறடிக்கவும் எதிர்க்கவும் காங்கிரஸுக்கு 52 எம்பி.,க்கள் போது என்று கூறியுள்ளார் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவராக தேர்வு செய்தனர். அப்போது பேசிய ராகுல், நம்மிடம் உள்ள 52 எம்.பி.,க்களும் பாஜக.,வை எதிர்த்து ஒவ்வொரு இன்ச்சும் போராடுவார்கள் என நான் உறுதி அளிக்கிறேன். பாஜக.,வை ஒவ்வொரு நாளும் கேள்வி கேட்டுஎதிர்க்க நம்மிடம் உள்ள 52 எம்.பி.,க்கள் போதும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories