ஜூன் 8ல் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க வருகிறார் பிரதமர் மோதி!

Published:

modi thiruvananthapuram2 - 2026

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோதி ஜூன் 8-ல் தரிசனத்துக்கு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோதி கேரளத்தின் மிகவும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் ஜூன் 8ஆம் தேதி அன்று பிரார்த்தனை செய்கிறார். இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு மோதி தென்னிந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது

இது குறித்து கோவில் வட்டாரங்கள் தெரிவித்தபோது, கிருஷ்ணர் கோவிலில் குறைந்தது 45 நிமிடங்கள் பிரதமர் மோதி செலவிட உள்ளார். இதுகுறித்து பிரதமரின் அலுவலகம் அவர் வருகையை உறுதிப் படுத்தியுள்ளது. நாங்கள் பெற்ற தகவலின் படி அவர் மதிய நேரத்தில் உச்ச பூஜை வருவார் எனத் தெரிகிறது.. என்றார்கள்.

இதுகுறித்து குருவாயூர் தேவஸ்வம் போர்டு அதிகாரி மேலும் கூறியபோது, அவருடன் வேறு யாரையேனும் அமைச்சர்கள் வருகிறார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்று கூறியுள்ளார்

அதேநேரம் பாஜக இது குறித்து கூறியுள்ள போது பிரதமர் குருவாயூர் கோயிலில் பிரார்த்தனை மேற்கொள்கிறார். வேறு எவரும் உடன் வரவில்லை மேலும் கட்சியினரும் வருவதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

ஜூன் எட்டாம் தேதி முற்பகல் 11:30க்கு பிரதமர் வருகிறார் என்றும் 4 மணி அளவில் அவர் தில்லி திரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற வைணவத் தலம்.  கேரளத்தின் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் ஏற்கனவே மோதி வழிபாடு செய்துள்ளார் அது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது! கடந்த ஜனவரி மாதம் அவர் திருவனந்தபுரம் கோயிலில் பிரார்த்தனை செய்தார்! இந்நிலையில் இப்போது குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு மோதி வர இருக்கிறார்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img