December 6, 2025, 5:36 PM
29.4 C
Chennai

காதலிக்க மறுத்த பெண்ணின் காதை அறுத்த இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு….!

vettu - 2025

ஒருதலைக்காதல்… நர்ஸ் காதை அறுத்த ஆம்புலன்ஸ் டிரைவர்- திருவனந்தபுரத்தில் பட்டபகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது..

மேலும் ஒருதலைகாதலால் பாதிக்கப்படும் இளபெண்களின் எண்ணிக்கை அதிகரித்து  வரும் மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

காதலிக்க மறுக்கும் இளம்பெண்கள் மீது ஆசிட் வீசுகின்றனர், கத்தியால் குத்தி கொல்கின்றனர்.

திருவனந்தபுரத்தில் நர்ஸ் ஒருவர் காதலை ஏற்க மறுத்த காரணத்தினால் காதை பறிகொடுத்த அதிர்ச்சியான சம்பவம் மனதை பதற வைத்துள்ளது. .

பெண்ணின் காதை அறுத்துவிட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரளாவில் சமீப காலங்களில்  பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பட்டப்பகலில் பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் திருவள்ளா, பத்தனம் திட்டாவில் பகல் நேரத்தில் பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு பெண்ணின் மீது கொலை முயற்சி நடந்துள்ளது.

அந்த பெண்ணை கத்தியால் குத்தியது ஏன் என்று விசாரணை நடத்திய போலீசார் 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

கேரளா மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்தவர் புஷ்பா, 39 இவர் . திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நர்ஸ் ஆக வேலை செய்து வருகிறார்.

புஷ்பாவை 35 வயதாகும் நிதின் என்ற இளைஞர் தன்னை காதலிக்கும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

முதலில் புஷ்பா அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்றாலும் அவனின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கி உள்ளது.

இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல தான் தாங்கியிருந்த விடுதியில் இருந்து காலை 7 மணியளவில் மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் சென்ற போது, மறைந்திருந்த நிதின், பின்தொடர்ந்து வந்து கத்தியால் புஷ்பாவின் முகத்தில் வெட்டியிருக்கிறான்.

இதில் புஷ்பாவின் காது துண்டானது. புஷ்பாவின் அலறல் சத்தம் கேட்கவே, அந்தப்பக்கம் வந்த காவல்துறை ரோந்து வாகனத்தை நிறுத்தி புஷ்பாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கழுத்திலும் முகத்திலும் பலத்த காயமடைந்த புஷ்பா மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு தப்பி ஓடிய நிதின் குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில்

நிதின் கொல்லத்தில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.  நிதின், தன்னை விட வயது அதிகம் கொண்ட புஷ்பாவை தொந்தரவு செய்தது ஏன்? , ஒருதலைக்காதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories