அடுத்த 5 வருடம் ‘நோ’ அரசியல்… சினிமா தொழிலில் இறங்கும் சந்திரபாபு நாயுடு மகன்!

Published:

IMG 20190602 WA0000 - 2026

முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் முன்னாள் அமைச்சர் நாரா லோகேஷ் சமீபத்திய தேர்தலில் தோற்றுப் போனார்.

இந்த ஐந்து ஆண்டுகளும் அரசியலில் பெரிதாக செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை ஆதலால் சினிமாவின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.

எப்படியும் மாமனார் பாலகிருஷ்ணா சினிமாத் துறையில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். சித்தப்பா மகன் நாரா ரோஹித் ஹீரோவாக உள்ளார்.

IMG 20190602 WA0002 - 2026அதுமட்டுமின்றி அம்மா வழியில் நந்தமூரி குடும்பம் சினிமா உலகில் நல்ல பிடிப்பில் உள்ளார்கள்.

குண்டூர் மாவட்டம் மங்கள கிரி யில் போட்டியிட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடம் தோற்றுப்போனார் லோகேஷ். அரசியல் விவகாரங்களை தந்தை சந்திரபாபு நாயுடு பார்த்துக் கொள்கிறார் . கட்சிப் பொறுப்புகளில் சிலவற்றை மட்டும் பார்த்துக் கொண்டே சினிமாவில் அடியெடுத்து வைக்கப்போகிறார் என்ற செய்தி பரவலாகி வருகிறது.

ஆனால் நடிகராக அல்ல சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து வரிசையாக படங்களை எடுத்துத் தள்ள தீர்மானித்துள்ளார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

IMG 20190602 WA0001 - 2026இந்த ஐந்து ஆண்டுகளில் சினிமா வியாபாரத்தில் ஈடுபடப போகிறார். பொதுவாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது தலைவர்கள் பிசினஸில் ஈடுபடுவதுதான் வழக்கம். லோகேஷும் அதையே செய்யப்போவதாக செய்தி வைரலாகி வருகிறது.

36 வயதான லோகேஷ் சினிமாவில் இறங்குகிறார். அதேநேரம் இவர் மனைவி பிராஹ்மணி, சினிமா நடிகரும் என்டிஆரின் மகனுமான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகள் . பிராஹ்மணி ஹெரிடேஜி டயரி புட் கம்பெனியின் எக்சிகியூடிவ் டைரக்டர். இவர்களுக்கு நாரா தேவான்ஷ் என்ற மகன் இருக்கிறார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img