இழுத்து மூடப்படும் அண்ணா கேன்டீன்கள்!

Published:

ap anna canteen - 2026

ஜெயலலிதாவின் அம்மா உணவகம் போல சந்திரபாபு நாயுடு அண்ணா கேன்டீன் தொடங்கினார். தற்போது தாற்காலிக அண்ணா கேன்டீன்கள் மூடப்படுகின்றன.

மிகக் குறைந்த விலையில் சுவையான உணவை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தெலுங்கு தேசம் கட்சி அரசு சென்ற ஆண்டு ஜூலையில் அண்ணா கேன்டீன்களை அட்டகாசமாக ஆரம்பித்து வைத்தது.

வெறும் ஐந்து ரூபாய்க்கே சாப்பாடு போட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு சந்திரபாபு நாயுடு அண்ணா கேன்டீன்களை தொடங்கி வைத்தார். முதலில் நகரங்களில் தொடங்கப்பட்டது. பின் மாநிலத்தின் பல்வேறு மண்டல கேந்திரங்களில் தற்காலிக இடங்களில் அண்ணா கேன்டீன்களை அமைத்தார்கள்.

ஆனால் தற்காலிக கேன்டீன்கள் தற்போது மூடப்பட்டு வருகின்றன. நிர்வாக அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தொகை ரூ. 45 கோடி வரை நிலுவையில் இருப்பதால் கேன்டீன்களுக்கு உணவு அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள்.

மாநில அளவில் 204 அண்ணா கேன்டீன்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்ற அரசு லட்சியமாகக் கொண்டு இருந்தது! அதில் 184 கேன்டீன்களை நகரங்களில் தொடங்கினார்கள். மீதி உள்ளவற்றின் வேலைகள் பல நிலைகளில் முடிவடையாமல் நிற்கின்றன .

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

ஆனால் எம்எல்ஏக்களிடமிருந்து பெரிய அளவில் வேண்டுகோள்கள் வந்ததால் தேர்தலுக்கு முன் மண்டல கேந்திரங்களில் இந்த கேன்டீன்களை தெலுங்கு தேசம் கட்சி அரசு தொடங்கி வைத்தது. இருப்பினும் கட்டடங்கள் கிடைக்காததால் தற்காலிக ஷெட்களில் அவற்றை அமைத்தார்கள்.

இந்த கேன்டீன்களுக்கு உணவு அனுப்பும் “அட்சய பாத்ரா” நிர்வாகத்திற்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவை கோடிக் கணக்கில் பாக்கி இருக்கிறது.இது தொடர்பாக தங்களது சிரமத்தை அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்றாலும் எந்த ஏற்பாடும் நடைபெறாததால் கேன்டீன்களுக்கு உணவு விநியோகம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

நிரந்தர கட்டிடங்களில் நடந்து வரும் கேன்டீன்களுக்கு மட்டும் எந்த தொந்தரவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img