அதிர்ஷ்டம்… புரட்சி… அசத்தல்… எல்லாம் கலந்த ஜெகனின் அமைச்சரவை!

ap ministry - 2026

எதிர்பாராமல் அடித்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்! ஜெகன் அமைச்சரவையில் அமைச்சர் பதவிகளைப் பார்க்கும் போது!

ஜெகன் அமைச்சரவையில் பழைய தலைவர்களும் புதிய தலைவர்களும் சேர்ந்து கலந்த அமைச்சரவையாக உள்ளதுதான் ஆச்சரியத்துக்குக் காரணம்.

மாவட்டங்களையும் சமூக வர்க்கத்தினரையும் கணக்கில் கொண்டு தராசில் வைத்து நிறுத்தது போன்று அமைச்சர் பதவிகளை வழங்கியிருக்கிறார் ஜெகன். சீனியர்களும் இளைஞர்களும் பெண்களுமாக கலகல என கலந்த அமைச்சரவை.

இதில் ஏழு பேருக்கு முற்றிலும் எதிர்பார்க்காத, யூகிக்க இயலாத அமைச்சர் பதவிகள்..! 25 அமைச்சர்களில் பிஹெச்டி முதல் 10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் உள்ளார்கள். ஆந்திர பிரதேச அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது.

25 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். சனிக்கிழமை இன்று ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர்களுக்கு ஆளுநர் நரசிம்மன்  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முதியவர்கள் இளைஞர்கள் பெண்கள் என்று அமைச்சர்ளை சமமாக தேர்ந்தெடுத்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. முக்கியமாக கேபினட்டில் சீனியர்களுக்கு பெரிய பதவிகளை அளித்துள்ளார்! அதேபோல யாராலும் கணிக்க இயலாதபடி சிலருக்கு அமைச்சர் பதவி யோகம் அடித்துள்ளது.

ap ministry2 - 2026மாவட்டங்கள், சமூகப் பிரிவுகள்  என்ற அடிப்படையில் எதிர்பாராத பதவிகளை பெற்று உள்ளார்கள் சில தலைவர்கள். அதிர்ஷ்டம் அடித்தது போல் ஏழு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. யாரும் எதிர்பாராத விதத்தில் இவர்கள் அமைச்சர் குழுவில் பிடித்து விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

கேபினட்டில் இடம் பிடித்தவர்கள் தானேடி வனிதா, செருகுவாட ரங்கநாத ராஜு, வெல்லம்பல்லி ஸ்ரீனிவாஸ், அனில் குமார் யாதவ், நாராயணசுவாமி, சங்கரநாராயணா, கும்மனூரு ஜெயராம் இவர்கள் அந்த ஏழு பேர்.

இவர்களுள் சங்கரநாராயணன் முதல் முறை எம்எல்ஏவாக வென்றுள்ளார். மற்றவர்கள் இரண்டாவது முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று பதவியை பிடித்துள்ளார்கள். இவர்கள் பெரும்பாலோருக்கு சமூகப் பிரிவு அடிப்படையில் பதவி கிடைத்துள்ளது.

பெண் எம்எல்ஏவுக்கு உள்துறை அமைச்சர் பதவி. ஆந்திராவில் தன் மந்திரிகளைத் தேர்ந்தெடுத்த விதத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி .

குண்டூர் மாவட்டம் “பத்திபாடு” எம்எல்ஏ சரிதாவுக்கு தங்கமான வாய்ப்பு கிட்டியுள்ளது. அன்றைய முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி “சேவேள்ள” எம்எல்ஏ சபீதா இந்திரா ரெட்டிக்கு ஹோம் மினிஸ்டர் பொறுப்பை ஒப்படைத்து ஆந்திரப் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தினார். அதுபோல் பெண்ணுக்கு ஹோம் மினிஸ்ட்ரியைக் கொடுத்துள்ளார் ஜெகன்.

சீனியர் தலைவர் “புக்கன ராஜேந்திர நாத் ரெட்டிக்கு ஜெகன் முக்கியமான நிதித் துறையை  ஒதுக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக ஐந்து துணை முதல்வர்களை அமர்த்தியபோது கூட சமூகப் பிரிவுகளின் சரிவிகித அடிப்படைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

பாமுல புஷ்பா ஸ்ரீவாணி, பில்லி சுபாஷ் சந்திரபோஸ், ஆள்ள நானி, அம்ஜாத் பாஷா, நாராயணசுவாமி இவர்களே அந்த ஐந்து துணை முதல்வர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories