December 8, 2025, 10:51 PM
24.7 C
Chennai

ஒரே முகாம்… 60 ஆயிரம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து… உண்மையில் இது பலன் தருகிறதா?!

fish medicine asthma1 - 2025மக்களை வெய்யிலில் வாட்டி வதக்கிய ரோகிணி நட்சத்திரம் முடிந்து மிருகசீரிஷம் வந்தவுடன் மழை பெய்து பயிர்கள் செழிக்கும் என்று முதல் தூறலை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பர். ஆனால் லட்சக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் ஹைதராபாத் நகரத்தை நோக்கி பயணிப்பார்கள்.

‘பொத்தின கௌட்’ சகோதரர்கள் அளிக்கும் மீன் பிரசாதத்துக்காகத்தான் இந்த பயணமும் காத்திருப்பும்! ஹைதராபாத் பொத்தின கௌட் குடும்பத்தார் தயாரித்து அளிக்கும் மீன் மருந்து பற்றி அறியாதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூறலாம்.

இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் மிருகசீரிடம் தொடங்கும் நாளில் நோயாளிகளுக்கு மருந்தை உயிருள்ள மீன்குஞ்சுகளுக்குள் வைத்து நோயாளிகளின் வாயில் தொண்டைக்குள் தள்ளிவிடுவார்கள். உடனே நோயாளி அதை அப்படியே விழுங்கி விட வேண்டும்.

தொடக்க காலத்தில் பொத்தினகௌட் சகோதரர்கள் தனிப்பட்ட முறையில் செய்துவந்த இந்த சேவையை தற்போது அரசாங்கமே முன்னெடுத்து நடத்துகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆஸ்துமா நோயாளிகள் ஹைதராபாத் நோக்கி படையெடுக்கிறார்கள்.

இரண்டு நாள் முன்பாகவே ஹைதராபாத் வந்துவிடுவார்கள். சிறுவர் பெரியவர் என்ற வயது வேறுபாடின்றி அனைவரும் இதனை எடுத்துக் கொள்கிறார்கள்.

1847 முதல் இந்த மீன் பிரசாத விநியோகத்தை பொத்தினகௌட் சகோதரர்கள்  இலவசமாக செய்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான மீன் பிரசாத விநியோகம் இந்த மாதம் வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியோடு முடிந்தது.

fish medicine asthma - 2025தெலங்கானா ஹைதராபாத் ‘நாம்பல்லி’ கண்காட்சி மைதானத்தில் மீன் மருந்து விநியோகம் நடந்து முடிந்தது. 60,000 பேருக்கும் மேல் மீன் மருந்து அளிக்கப் பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் தலசாணி ஸ்ரீனிவாச யாதவ் தெரிவித்தார்.

மீன் மருந்து விநியோகத்துக்கு உதவிய பொத்தின ஹரநாத் கௌட் சகோதரர்கள், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன், காவல்துறை, மெட்ரோ குடிநீர் வாரியம், மின்சார வாரியம், ரெவின்யூ மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் நன்றி தெரிவித்தார்.

மீன் மருந்து விநியோகித்த மைதானத்தில் அனைவருக்கும் உணவு வசதி மற்றும் பிற வசதி சேவைகளை அளித்த தன்னார்வ அமைப்புகளை அவர் பாராட்டினார். இன்னும் மீன் மருந்து பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் ‘தூத் பௌல்’ என்ற இடத்தில் இருக்கும் பொத்தின ஹரநாத் கௌட் வீட்டுக்குச் சென்று அவற்றை பெறலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Entertainment News

Popular Categories