காலைத்தொட்டு கும்பிட குனிந்த ஜெகன்! என்ன சொன்னார் மோதி?!

Published:

IMG 20190610 WA0001 - 2026

ரேணிகுண்டா விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோதிக்கு பாத நமஸ்காரம் செய்ய முயன்றார் ஜெகன்! தடுத்து நிறுத்தினார் மோதி.

ஞாயிறன்று மாலை திருப்பதி தரிசனத்திற்காக வந்த மோடி ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் பிரதமரை இரு தெலுங்கு மாநிலங்களின் ஆளுனர் ஈஎஸ்எல் நரசிம்மன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி , மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியோடு ஆந்திர பிரதேச அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பிஜேபி தலைவர்கள் முதலியோர் வரவேற்றார்கள்.

ஆளுனர் ஈஎஸ்எல் நரசிம்மனை அடுத்து பிரதமருக்கு ரோஜா மலர் அளித்து வரவேற்ற ஜெகன்,  பிரதமரின் காலைத் தொட்டுக் கும்பிட முனைந்து குனிந்தார். ஆனால் அதனை மறுத்த பிரதமர் மோதி, ஜகனின் கையைப் பிடித்து நிறுத்தி விட்டார்.

ஜெகனின் தோளைத் தட்டிக் கொடுத்து ஏதோ கூறினார். ஆனால் அதைக் கேட்ட பிறகு மீண்டும் முதல்வர் ஜெகன், பிரதமர் மோதியின் காலை தொட்டு வணங்க முயன்றார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

அப்போது மீண்டும் தடுத்து நிறுத்தினார் பிரதமர் மோதி. அவர் அப்போது என்ன சொன்னார் என்பது அங்கிருந்த எவருக்கும் தெரியவில்லை.

பிரதமரை வரவேற்றவர்களுள் அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி, ஒய்எஸ்ஆர் மாநிலங்களவை உறுப்பினர் விஜய சாயி ரெட்டி, எம்எல்ஏ பூமன கருணாகர ரெட்டி, சந்திரகிரி எம்எல்ஏ “செவிரெட்டி பாஸ்கர ரெட்டி ” முதலியோர் முக்கியமானவர்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img