முதல்வர் யோகியை இழிவுபடுத்தி பதிவிட்ட பத்ரிகையாளரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

prashant khannojya - 2026

புது தில்லி: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து கேவலமாகவும் இழிவுபடுத்தியும் சர்ச்சைக்குரிய விதத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப் பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜ்யாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தனி நபர் தாக்குதலாக சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதாக கனோஜ்யா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். டிவிட்டரில் அவர் வெளியிட்ட வீடியோவில், பெண் ஒருவர் முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன் நின்று கொண்டு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீடியோ காலிங் மூலம் பேசினார், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன் என்று தனிநபர் களங்கப்படுத்தும் விதமாக பேசுவதை வெளியிட்டு, நாங்கள் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதை அடுத்து இந்த வீடியோவை வெளியிட்ட செய்தி தொலைக்காட்சியின் தலைவரும், மற்றொரு தனியார் செய்தி தொலைக்காட்சியின் எடிட்டரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். பிறகு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, மேலும் 4 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜ்யாவை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரப் பிரதேச நீதிமன்றம், மாநில போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து பிரசாந்த் கன்னோஜ்யாவின் மனைவி சார்பில் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இது, தனிநபர் சுதந்திரத்தை மறுக்கும் செயல் எனத் தெரிவித்தது. கனோஜ்யாவின் டிவிட்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அதற்காக அவர் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கையும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறி, அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய மாநில போலீசாருக்கு உத்தரவிட்டனர். மேலும், பிரசாந்த் கனோஜ்யா மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories