நான் வாழ்வது மதச்சார்பற்ற இந்தியாவில் உங்கள் விமர்சனங்கள் எடுபடாது! பதிலடி கொடுத்த நுஸ்ரத்ஜஹான்…!

nusrath - 2026

குங்கமம், தாலி அணிந்து வந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதிவியேற்றதற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நுஸ்ரத்ஜஹான்,

தான் வாழ்வது மதச்சார்பற்ற நாட்டில், மத்ததின் பெயரால் நான் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை; எனவே விமர்சனங்களுக்கு நான் செவிசாய்ப்பதில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பஸிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற பிரபல வங்காளத்து நடிகை நுஸ்ரத்ஜஹான்.

இவர் கடந்த 25ம் தேதி நாடாளுமன்றத்தில் எம்பி.யாக பொறுபேற்றுக் கொண்டார்.

இவர், பிரபல தொழிலதிபர் நிகில்ஜெயினை கடந்த 19-ம் தேதி துருக்கியில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து ஒருவாரத்திற்கு பின்னர் எம்பி யாக பதவியேற்றுக்கொண்டார் நுஸ்ரத்ஜஹான் அப்போது அவரது தோற்றம் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

நெற்றியில் குங்குமம், தாலி, கை நிறைய வளையல், மருதாணி என முழு புது மணப்பெண் கோலத்தில் காட்சி அளித்திருந்தார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

உ.பியின் ஜமியா சேக் இயக்கத்தை சேர்ந்த முஃப்திஅசாத்ஆஸ்மி நுஸ்ரத் மீது கடும் விமர்சனம் வைத்தார்.

அவர் கூறுகையில் ‘நுஸ்ரத்ஜஹானின் திருமணத்தை நான் அங்கீகரிக்கவில்லை, நடிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்வார்கள்,

இஸ்லாமிய விதிப்படி இது பெரும் தவறு, இஸ்லாமியா்கள், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவா்களைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்,

தற்போது இஸ்லாம் மதத்தை சாராத ஒருவரை திருமணம் செய்து கொண்டு குங்குமமும், தாலியும் அணிந்து நாடாளுமன்றம் வந்துள்ளார்.

எனவே, இந்த பிரச்னையை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

இது குறித்து நுஸ்ரத் கூறுகையில் ‘எனக்கு எதிராக இதுவரையில் ஃபாத்வா வழங்கப்பட்டதில்லை, என்னை விமா்சித்தார்கள்; ஆனால் அந்த விமா்சனங்களுக்கு நான் செவிசாய்த்ததில்லை,

முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் குடிமக்கள் நாம், இங்கு எல்லா கலாச்சாரங்களும், சடங்குகளும் மதிக்கப்பட வேண்டும்.

கடவுளின் பெயரில் நாம் ஏன் பிரிவினையை உண்டாக்க வேண்டும்? நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள்; மதச்சார்பற்ற நாட்டின் குடிமகள், கடவுளின் பெயரில் மக்களிடம் பிரிவினையை உண்டாக்க என்னை மதம் கற்பிக்கவில்லை,

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

வங்காள மொழியில் பேசுவதும், திருமணம் ஆனதால் நெற்றியில் குங்குமம், இட்டுக்கொள்வதும் என் விருப்பம், என் மனம் செல்லும் வழியில் நான் செல்கிறேன், இதில் யார் என்னை மதத்தின் பெயரில் விமர்சித்தாலும் அதை நான் கண்டுகொள்ள மாட்டேன்,

இது என் வாழ்க்கை; அதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்” என பதிலடி கொடுத்தள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories