ரூ.400 கோடி இலக்குடன் துவங்கியது மொய்விருந்து விழா……!

MOIVERUNTHU 7 - 2026

ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒரு விழா என கொண்டாடி அசத்தி வருவார்கள் தமிழர்கள் அந்தவகையில் நடத்தப்பட்டு வருவதே மொய் விருந்து விழா.

நலிவடைந்த ஒருவரை காப்பாற்றும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு என்பதற்காக நடத்தபடும் பரம்பாிய விழா.

மொய் விருந்து விழாஎன்பது திருமண விழா, காதணி விழா,புதுமனை புகுவிழா போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் களைக்கட்டிக் கொண்டிருக்கும் ஒரு விழா “மொய் விருந்து விழா”. இ்வ்விழா தமிழ்நாட்டில் தஞ்சாவூா்,புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.

வீட்டில் பொதுவாக நடைபெறும் இல்லற விழாக்கள் போன்று இல்லாமல் மொய் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் விழா மொய் விருந்து விழாவாகும்.

MANI 2 3 - 2026

இந்த மொய்விருந்து விழாவானது ஒரு தனி நபரால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

மேலும் இவ்விழா ஐந்து அல்லது பத்து நபா்களால் கூட்டாகவும் சோ்ந்து ஒரே விருந்து கொடுத்து பத்து நபா்களாலும் மொய் வாங்கப்படுகிறது.

இதனால் இவா்கள் கூடுதலான வட்டிக்கு பணம் வாங்கி மொய் செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் இந்த மொய் பற்றிய பாதிப்புகள் பல்வேறு செய்தி்த்தாள்களிலும் வந்துள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

இந்த மொய் விருந்து விழாவினால் மிகவும் பயன் பெறுபவா்கள் வசதி படைத்தவா்களே. இவா்கள் போட்ட மொய்யினை நான்காண்டுகள் கழித்து வட்டியும் முதலுமாக வசூலித்து மிகவும் பயன் பெறுகிறார்கள்

இந்த மொய் விருந்து விழாவினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகுபவா்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்களே. ஏனென்றால் வசதியானவா்கள் சிலா் தமக்கு செய்த அதிக மொய்யினை செய்தும் அதற்குமேலும் கூடுதலாக மொய் செய்யும் நிலை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் கலாச்சாரம் சார்ந்த விழாவாக கருத்தப்படும் மொய் விருந்து விழா தொடங்கி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் மொய்விருந்து விழாக்கள்,

அது மெல்ல மெல்ல வளா்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும பரவி தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போய் உள்ளது.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தற்போது தொடங்கியுள்ள மொய் விருந்து விழா,

அதனை சுற்றிய பகுதிகளான அணவயல், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, சேந்தன்குடி, குளமங்கலம் என தொடர்ந்து அடுத்தடுத்த ஊர்களில் வரும் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் வரை நடைபெறும்,

கடந்த ஆண்டு 500 கோடி வரையில் மொய் வணம் வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் வசூலாகும் மொய் தொகையின் விகிதாச்சாரம் குறையும் என்று விழா ஏற்பாட்டாளா்கள் கூறுகின்றனா்.

தற்போது கீரமங்கலம் பகுதியில் மொய் விருந்து களைகட்டத் தொடங்கி உள்ளது.

வீடுகள் தோறும் மொய் விருந்து அழைப்பிதழ்கள் குவிய தொடங்கி உள்ளன,

மேலும் மொய் விருந்து பேனர்கள் ஆங்காங்கே பளபளக்க தொடங்கி விட்டன, மொய் விருந்து விழாவிற்கு வருபவர்களை விழா நடத்துபவா்கள் அன்போடு மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டுக் கறியுடன் கூடிய விருந்து பரிமாறப்படுகிறது.

பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் இந்த மொய் விருந்து விழாக்களால் பலரும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதாக அப்பகுதி வாசிகள் கூறுகின்றனா்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

மேலும் கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டு மொய் விருந்தில் எதிர்பார்த்த தொகை கிடைக்காவிட்டாலும் 250 கோடி முதல் 400 கோடி வரையில் இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

மேலும் மொய் விருந்துக்குப் பெயர் போன புதுக்கோட்டை மாவட்டத்தில் கணிணி மூலம் பணம் வசூலிக்கும் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட தக்கது.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories