December 6, 2025, 8:15 AM
23.8 C
Chennai

அடி உதவுவது போல… அப்படி ஒரு நிகழ்வு இது!

jebamani mohanraj - 2025

ஒரு அடி! இரண்டு மாத தடை! மீண்டும் சி பி ஐ நிகழ்வு!

வருமான வரி துறை வழக்கு ஒன்றினை விசாரிக்க திருச்சி வருமான வரி அலுவலகம் சென்று இருந்தேன். தலைமை குமாஸ்தாவை விசாரித்து விட்டு அடுத்தவர் வருகைக்காக காத்திருந்தேன்.

நேரம் போனது .விசாரணைக்கு வர வேண்டிய நபர் வரவில்லை.,. என்ன ஆனது என்று பார்க்க அறையை விட்டு வெளியே வந்தால் தலைமை குமாஸ்தா கோட்டு சூட்டு அணிந்து இருந்த ஒரு நபரிடம் கை நீட்டி ஏதோ பணம் வாங்கி கொண்டு இருந்தார்.

தலைமை குமாஸ்தா என்னை பார்த்த உடன் ஒடி விட்டார்.கோட்டு சூட்டு நபர் அங்கேயே நின்று கொண்டு இருந்தார். அவரிடம் போய் என்ன கொடுத்தீர்கள் எவ்வளவு கொடுத்தீர்கள் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்டேன். துண்டு சீட்டு கொடுத்தேன் என்றார். விட்டேன் ஒரு அடி.

மனிதன் கலங்கி போனார்.20 ரு கொடுத்தேன் என்றார். நான் சி பி ஐ அதிகாரி என்பதை சொல்லி இனி இப்படி லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று சொல்லி அனுப்பினேன்..

பின்னர் விசாரணையை முடித்து விட்டு கிளம்பினேன்! தலைமை எழுத்தர் ஒடி போனவர் பின்னர் நான் இருக்கும் வரை வரவில்லை..

சம்பவம் நடந்த கொஞ்ச நாள் கழித்து கோட்டு சூட்டு நபர் ஒரு பெரியவருடன் வீட்டுக்கு வந்தார். பெரியவர் ஜனதா கட்சிகாரர், என் தந்தைக்கு நண்பர். அவர் என் தந்தையிடம் ..கோட்டு சூட்டு நபர் ஒரு கல்லூரி பேராசிரியர் என்றும் லஞ்ச வழக்கு ஏதாவது போட்டால் வேலைக்கு ஆபத்து வந்துவிடும் ஆகவே 20 ரூ விவகாரத்தை விட்டு விடும் படி உங்கள் பையனிடம் சொல்லுங்கள் என்றார்.

என் தந்தை நான் அதில் எல்லாம் தலையிடமாட்டேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்.. பிறகு நான் அவர்களை பார்த்து ஒன்றும் பயப்பட வேண்டாம் வழக்கு எல்லாம் வராது என்று சொன்னேன்.

சம்பவம் நடந்து இரண்டு மாதம் கழித்து சி பி ஐ டி ஐ ஜி என்னை அழைத்தார். திருச்சியில் என்ன நடந்தது என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன்.

என்னையா நீ பாட்டுக்கு ஒருத்தனை அடித்துவிட்டு வந்து விட்டாய்.. அந்த அலுவலகத்திற்குள் இரண்டு மாதமாக பொதுமக்களையும், ஆடிட்டர்களையும் அனுமதிப்பதில்லையாம்! உள்ளே வந்தால் சி பி ஐ ஆட்கள் அடிப்பார்கள் என்று மிரட்டலாம்! நான் இனி அப்படியெல்லாம் நடக்காது என்று தைரியம் சொல்லி அனுப்பினேன் என்றார்.

மோகன்ராஜ் கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் .என்று புத்தி சொன்னார்!

ஆக… ஒரு அடியில் லஞ்சத்துக்கு இரண்டு மாத தடை விதிக்கப்பட்டது .

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பது முற்றிலும் உண்மை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories