December 5, 2025, 6:22 PM
26.7 C
Chennai

காதலியுடன் மலையிலிருந்து குதித்த காதலன்! பின் நடந்த விஷயம்,.!

love - 2025

திருவண்ணாமலை மாவட்டம் சந்தபுதுப்பாளையம் பகுதியை சேர்ந்த எண்ணெய் வியாபாரி அருணாசலம் மகன் அருண்குமார் (வயது 19), இவர் சோமாசிபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வருகிறார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் உள்ளார். இவர்கள் இருவரும் திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடியில் 1 வருடத்திற்கு முன் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்ற போது சந்தித்து பழகி உள்ளனர். ஒருவருக்கொருவர் கைப்பேசி எண்ணை பகிர்ந்து கொண்டு செல்லில் பேசி காதலை வளர்த்துள்ளனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இரு வீட்டாரும் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து போளூருக்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர்.

polur lak nara - 2025

900 படிக்கட்டுகள் உள்ள போளூர் சுயம்பு லட்சுமி நரசிம்மசுவாமி மலை மீது ஏறினர். இந்த மலை சுமார் 300 அடி உயரம் கொண்டதாகும். நேற்று காலை மலையை விட்டு கீழே இறங்கி அல்லிநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தனர். அங்கு சாப்பிட்டுவிட்டு மீண்டும் மலைமீது ஏறினர்.

மலைப் பகுதியில் காதல் ஜோடி ஒன்று நடமாடுவதை கண்டு அப்பகுதி மக்கள் மதியம் 12 மணியளவில் போளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போளூர் துணை சூப்பிரண்டு குணசேகரனின் குழுவினர் அவ்விடத்துக்கு வந்தனர்.

அவர்களில் சிலர் படிக்கட்டு வழியாகவும், சிலர் பாறைகள் வழியாகவும் மலையில் ஏறினர். காவலதுறையினர் தங்களை பிடிப்பதற்காக வருவதை பார்த்ததும் அருண்குமாரும், அவரது காதலியும் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள கீழே குதித்தனர்.

அவர்கள் கீழே உள்ள பாறையில் விழுந்ததால் இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயத்துடன் துடித்த இருவரையும் காவல்துறையினர் மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் போளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories