March 15, 2025, 10:50 PM
28.3 C
Chennai

காதலியுடன் மலையிலிருந்து குதித்த காதலன்! பின் நடந்த விஷயம்,.!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தபுதுப்பாளையம் பகுதியை சேர்ந்த எண்ணெய் வியாபாரி அருணாசலம் மகன் அருண்குமார் (வயது 19), இவர் சோமாசிபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வருகிறார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் உள்ளார். இவர்கள் இருவரும் திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடியில் 1 வருடத்திற்கு முன் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்ற போது சந்தித்து பழகி உள்ளனர். ஒருவருக்கொருவர் கைப்பேசி எண்ணை பகிர்ந்து கொண்டு செல்லில் பேசி காதலை வளர்த்துள்ளனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இரு வீட்டாரும் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து போளூருக்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர்.

900 படிக்கட்டுகள் உள்ள போளூர் சுயம்பு லட்சுமி நரசிம்மசுவாமி மலை மீது ஏறினர். இந்த மலை சுமார் 300 அடி உயரம் கொண்டதாகும். நேற்று காலை மலையை விட்டு கீழே இறங்கி அல்லிநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தனர். அங்கு சாப்பிட்டுவிட்டு மீண்டும் மலைமீது ஏறினர்.

மலைப் பகுதியில் காதல் ஜோடி ஒன்று நடமாடுவதை கண்டு அப்பகுதி மக்கள் மதியம் 12 மணியளவில் போளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போளூர் துணை சூப்பிரண்டு குணசேகரனின் குழுவினர் அவ்விடத்துக்கு வந்தனர்.

அவர்களில் சிலர் படிக்கட்டு வழியாகவும், சிலர் பாறைகள் வழியாகவும் மலையில் ஏறினர். காவலதுறையினர் தங்களை பிடிப்பதற்காக வருவதை பார்த்ததும் அருண்குமாரும், அவரது காதலியும் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள கீழே குதித்தனர்.

அவர்கள் கீழே உள்ள பாறையில் விழுந்ததால் இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயத்துடன் துடித்த இருவரையும் காவல்துறையினர் மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் போளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

Topics

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!

வருவாய் பற்றாக்குறை: வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக மதிப்பீடு. - இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றன.

மொழியை முன்வைத்து ஒரு கனவுத் திட்டத்தை நசுக்கி தமிழர்களைப் பாழாக்கும் ‘திராவிடர்கள்’!

இப்படிப்பட்ட எதிர்கால வளமைக்கான மாணவர்களைத் தயார் செய்யும் தொழில்நுட்பம், வசதிகள், ஆசிரியர் திறன், திறன் மேம்பாட்டு வசதிகளைப் புறக்கணித்து,

நாகரீகக் கோமாளிகள்!

கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்; நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!

Entertainment News

Popular Categories