December 5, 2025, 6:32 PM
26.7 C
Chennai

இன்று நள்ளிரவு கோலாகலமாகத் தொடங்குகிறது… நவராத்திரி திருவிழா!

Golu kankatchi2 - 2025

நவராத்திரி திருவிழா என்பது, சக்தி உபாசனையின் முக்கிய நாட்கள். ஒன்பது நாட்களும் அன்னை பராசக்தியை மூன்று வடிவங்களில் வழிபடுவது வழக்கம். குறிப்பாக, மேற்கு வங்கம், சக்தி வழிபாட்டில் முக்கிய மாநிலமாகத் திகழ்கிறது.

தமிழில் தேசியக் கவி பாரதி, யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் என்று பாடினார். மேற்கு வங்கத்தில் ஆன்மிகப் புரட்சி செய்த ஸ்ரீராமகிருஷ்ணர், பண்டைய தமிழக மண்ணில் தோன்றிய ஆதிசங்கரர் என பலரும் சக்தி உபாசகர்களாகத் திகழ்ந்தனர்.

சக்தி வழிபாடு என்பது இந்துக்களின் ஆன்மிக மரபில் ஓர் அங்கமாக, அம்சமாகத் திகழ்கிறது. சக்தி இல்லையேல் சிவமில்லை சிவமில்லையேல் சக்தி இல்லை என்ற தத்துவத்தை தன்னில் நிறைத்த சமுதாயம் இது. சிவபெருமான் தன்னில் பாதியை சக்திக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார். மனித வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சரி பாதி எனும் தத்துவத்தையும், பெண் இல்லாமல் ஆணின் வாழ்க்கை நிறைவை அடையாது எனும் சூட்சுமத்தையும் உணர்த்துவது இது.

kolu 1 - 2025

ஆண் தெய்வங்களும் பெண் தெய்வங்களும் இந்து மத வழிபாட்டில், இயல்பான வாழ்க்கையை மனித குலத்துக்கு எடுத்துக் காட்டுவது. பெண் இல்லாமல் செய்யும் சடங்குகள் முழுமை பெறாது என்பதால், ஆன்மிகச் சடங்குகளுக்கு பெண்களையும் உடன் இருத்தி வைத்தது இந்து தர்மம்.

sringer navarathri puja - 2025

அந்தத் தத்துவங்களில் அடிப்படையில், ஆண் தெய்வங்களுக்கு தனித்தனி வழிபாட்டு நாட்கள் இருப்பது போல், பெண் தெய்வங்களான சக்தி தேவியருக்கு இந்த நவராத்திரி வழிபாடு அமைகிறது. இந்த வழிபாட்டு நாட்களில், ஒன்பது தினங்களில் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரை வழிபடுவது மரபு.

மகாளய அமாவாசை நாளான இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி தொடங்குகிறது. துர்கா பூஜை அக்டோபர் 3ம் தேதியும், சரஸ்வதி பூஜை 7ம் தேதியும், விஜயதசமி 8ம் தேதியும் கொண்டாடப்படுகிறது.

Golu kankatchi1 - 2025

வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன. ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தசரா திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. இந்தத் திருவிழாவின் போது, கர்நாடக மாநிலம் மைசூரு திருவிழாக் கோலம் காண்கிறது. மைசூரு தசரா திருவிழா உலகப் புகழ்பெற்ற ஒன்று! இந்தத் திருவிழாக்களின் போது, மக்கள் டாண்டியா, கார்பா நடனங்கள் ஆடியும் சிறப்பு பூஜைகள் செய்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கும்.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதிகளில் கொலு பொம்மைகள் கண்காட்சி, கொலு பொம்மைகள் விற்பனை களை கட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories