மல்லையாவிற்கு உதவி? ‘நான் எந்த தவறும் செய்யவில்லை’: மன்மோகன் சிங் பதில்

புதுடெல்லி,
விஜய் மல்லையாவின் மூழ்கிக்கொண்டிருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டது. விஜய் மல்லையா கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி மத்திய நிதி மந்திரியாக இருந்த சிதம்பரத்துக்கும், 2011-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எழுதிய கடிதங்களை ஆங்கில நாளிதழ் வெளியிட்டது பூதகரமாகியது.
விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதிமந்திரி ப.சிதம்பரமும் தொடர்ச்சியாக உதவி செய்து உள்ளனர் என்ற குற்றம் சாட்டிஉள்ள பாரதீய ஜனதா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, விஜய் மல்லையாவிற்கு கோடி கணக்கில் கடன் வழங்கப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
தொழில் அதிபர் விஜய் மல்லையா சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி வரையில் இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பிவிட்டார். அவருக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு கோர்ட்டுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது, அனைத்து விசாரணை முகமைகளும் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு உள்ளது. பல்வேறு முறை இந்திய நீதிமன்றங்கள், விசாரணை முகமைகள் சம்மன் அனுப்பியும், விஜய் மல்லையா திரும்பவரவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இந்நகர்வு ஏற்பட்டு உள்ளது.
மன்மோகன் சிங் பதில்
குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், “எந்தஒரு ஆட்சியிலும் பிரதமர் மற்றும் பிற மந்திரிகளுக்கு தொழில்துறையின் பல்வேறு தலைவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வருவது வழக்கமானது… வழக்கமான முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதனை நாங்கள் அனுப்புவோம். நாம் சட்டத்திற்கு எதிராக தவறு எதுவும் செய்யவில்லை என்ற திருப்தியுடனே பணியை செய்தேன்,” என்று கூறிஉள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories