மல்லையாவிற்கு உதவி? ‘நான் எந்த தவறும் செய்யவில்லை’: மன்மோகன் சிங் பதில்

புதுடெல்லி,
விஜய் மல்லையாவின் மூழ்கிக்கொண்டிருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டது. விஜய் மல்லையா கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி மத்திய நிதி மந்திரியாக இருந்த சிதம்பரத்துக்கும், 2011-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எழுதிய கடிதங்களை ஆங்கில நாளிதழ் வெளியிட்டது பூதகரமாகியது.
விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதிமந்திரி ப.சிதம்பரமும் தொடர்ச்சியாக உதவி செய்து உள்ளனர் என்ற குற்றம் சாட்டிஉள்ள பாரதீய ஜனதா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, விஜய் மல்லையாவிற்கு கோடி கணக்கில் கடன் வழங்கப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
தொழில் அதிபர் விஜய் மல்லையா சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி வரையில் இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பிவிட்டார். அவருக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு கோர்ட்டுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது, அனைத்து விசாரணை முகமைகளும் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு உள்ளது. பல்வேறு முறை இந்திய நீதிமன்றங்கள், விசாரணை முகமைகள் சம்மன் அனுப்பியும், விஜய் மல்லையா திரும்பவரவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இந்நகர்வு ஏற்பட்டு உள்ளது.
மன்மோகன் சிங் பதில்
குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், “எந்தஒரு ஆட்சியிலும் பிரதமர் மற்றும் பிற மந்திரிகளுக்கு தொழில்துறையின் பல்வேறு தலைவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வருவது வழக்கமானது… வழக்கமான முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதனை நாங்கள் அனுப்புவோம். நாம் சட்டத்திற்கு எதிராக தவறு எதுவும் செய்யவில்லை என்ற திருப்தியுடனே பணியை செய்தேன்,” என்று கூறிஉள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

Topics

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Entertainment News

Popular Categories