நடிகர் விஜய் தேவரகொண்டா புது வீட்டிற்காக இவ்வளவு செலவழித்தாரா? அம்மாடீயோவ்…!!
‘சென்சேஷனல்’ ஹீரோ விஜய் தேவரகொண்டா சொந்த வீட்டிற்கு குடியேறினார். இதுவரை ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் இருந்த விஜய் தேவரகொண்டாவின் குடும்பம் புதிதாக ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள புது வீட்டுக்கு குடி மாறியது.
பிலிம் நகரில் உள்ள சினிமா ஹீரோ ஸ்ரீகாந்த் வீட்டிற்கு அருகில் உள்ள இந்த வீட்டை விஜய் தேவரகொண்டா விலைக்கு வாங்கினார். ஞாயிறு அன்று பெற்றோர் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து கிருஹப் பிரவேசம் செய்தார் விஜய். ஆனால் இப்போது அந்த வீடு பற்றிய சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது.
இந்த புது சொந்த வீட்டிற்காக விஜய் தேவரகொண்டா ரூபாய் 20 கோடி செலவழித்து உள்ளதாக இண்டஸ்ட்ரி டாக். இந்த வீட்டை மிக விசாலமாகக் கட்டி உள்ளாராம் விஜய். தற்சமயம் விஜய் நல்ல ஃபார்மில் உள்ளார். கீதகோபாலம் சினிமாவால் விஜய் மார்க்கெட் உயர்ந்து உள்ளது.
அதனால் தற்போது அவர் எட்டிலிருந்து பத்து கோடி வரை சம்பளம் வாங்குவதாக பேச்சு. அதுமட்டுமல்ல சொந்தமாக ‘ரவுடி ப்ராண்ட்’ என்ற பெயரில் துணி வியாபாரம் கூட செய்கிறார். அதுவும் நல்ல லாபத்தில் ஓடுகிறது.
இவற்றோடு கூட வணிக விளம்பரங்கள் மூலமும் பேருமளவில் சம்பாதிக்கிறார். பல பிராண்டுகளுக்கு விஜய் பிராண்ட்- அம்பாசிடராக உள்ளார். அவற்றின் மூலமும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.
அது மட்டுமல்ல விஜய் தேவரகொண்டா சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். முதல் படமாக ‘மீகு மாத்திரமே சேஸ்தானு’ தயாரித்தார். அதுவும் நல்ல லாபம் பெற்றுத் தந்தது.
தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு அவரின் பெற்றோர் பெண் தேடி வருகிறார்கள். விஜய்யை ஒரு குடும்பஸ்தன் ஆக்குவதற்கு முன்பு அவரை சொந்த வீடு வாங்கச் செய்தனர் பெற்றோர்.
“வீட்டை கட்டிப் பார்…! கல்யாணம் செய்து பார்!” என்கின்றனர் ரசிகர்கள்.