ராஜீவ் படுகொலை போல் தமிழகத்தில் திட்டமிடுகிறார்களோ? தமிழக அரசு நாடகம் ஆடுவது ஏன்?: ஹெச்.ராஜா!

hraja - 2026
file picture

தமிழக மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது போல், தமிழகத்தில் பிரதமரைக் கொலை செய்ய ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாகவே தெரிகிறது என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்து:

நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி. கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது. – என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நெல்லை கண்ணன் விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஹெச்.ராஜா குறிப்பிட்ட போது…

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லை கண்ணன் என்பவர் திருவேல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய கூட்டத்தில் பேசும் போது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களையும் அநாகரீமாக விமர்சித்தத்தோடு முஸ்லிம்கள் அவர்கள் இருவரையும் முடித்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் ஏன் தாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை இருவரையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று வன்முறையையும், கொலை வெறியையும் தூண்டும் வகையில் பேசிய காணொளி ஆதாரம் வெளிவந்திருக்கிறது …

தமிழக அரசும், காவல்துறையும் இந்நேரம் அவரை கைது செய்திருக்திருக்க வேண்டும். தாமதம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது …

அது மட்டுமல்ல நெல்லை கண்ணன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என நெல்லை கண்ணன் பேசியது அவருடைய கருத்தா இல்லை காங்கிரஸின் திட்டமா என்கிற சந்தேகம் எழுகிறது …

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். அவர் மெளனம் காக்கும் பட்சத்தில் நெல்லை கண்ணன் பேசிய பேச்சு காங்கிரஸின் திட்டம் என்பது உறுதியாகிவிடும் …

nellai kannan speech - 2026

மேலும் நெல்லை கண்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களுக்கு புகார் மனு அனுப்பி இருக்கிறேன் …

தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், தேசபக்தர்கள் அனைவரும் தங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் நெல்லை கண்ணன் மீது புகார் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் …

நெல்லை கண்ணனுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்களும், தேசபக்தர்களும் எவ்வித எதிர்வினையை ஆற்ற வேண்டும் என்பது குறித்து நாளை மாலை பாஜக மையக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் … – என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஹிந்து மதம் குறித்து இழிவு படுத்திப் பேசும் நெல்லை கண்ணனை ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“முஸ்லீம் பயங்கரவாதிகள் மத்தியில் மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிப் பேசிய தேசவிரோத நெல்லை கண்ணனை எந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என இந்துக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

“பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கொலை செய்யத் (சோலிய முடிப்பீங்க) தூண்டிய நெல்லைக் கண்ணன் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை. கல்யாணராமனின் முகநூல் பதிவிற்கு கைது செய்து ரிமாண் செய்த காவல்துறை பிரதமர், உள்துறை அமைச்சர் விஷயத்தில் வெறும் வழக்குப்பதிவு நாடகமா?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories