“பாரத ஹிதாய….” – ஸ்லோகம்… தமிழாக்கம்!

Published:

vidhaivinayakar - 2026

எழுதியவர்- ‘காவ்ய கண்ட’ வாசிஷ்ட கணபதி முனி.

  1. பத்ர தர மூர்திம் பத்ர தம கீர்திம் I
    ருத்ர தனயம் தம் காயத மஹாந்தம் II
  2. ஜ்யோதி ரிஹ சூக்ஷ்ம ஜ்வால மதி தீப்தம் I
    பாதி குலகுண்டௌ யோகி மனு ஜாப்தம் II
  3. தம் கணபதிம் யோ விஸ்மரதி லோகே I
    சந்தத மபாக்யோ மஜ்ஜதி ஸ ஸோகே II
  4. ஸீதனகஜாயாஸ்ஸூனுரதி ஹ்ருத்யாம் I
    பூரி கருணோமே பூரயதி வித்யாம் II
  5. வாரண முகோமே வாரயது கஷ்டம் I
    சர்வமபி தேயாத் சர்வ ஸுத இஷ்டம் II
  6. நிர்ஜித ஜராதிம் நிர்தலித ரோகம் I
    தந்தி வதனோமே வர்தயது யோகம் II
  7. ஹஸ்தி முக யாசே காடரஸ பக்த்யா I
    ஆவிஸ விபோ மாம் திவ்ய நிஜ சக்த்யா II
  8. தேஹி நிஜ தேஜ: கிங்கர ஜநாய I
    ஈஸ்வர கணானாம் பாரத ஹிதாய II
  9. சர்வதஜனோயம் வாஞ்சதி ந முக்திம் I
    தேச குசலாய ப்ரார்தயதி சக்திம் II
kavyakanta ganapathi muni - 2026
காவ்ய கண்ட கணபதி முனி

பொருள்:-

  1. மங்களகரமான மூர்த்தியை, சிறந்த மங்களகரமான கீர்தியுள்ளவனை ருத்திரனின் தனயனான மகாத்மாவை கானம் செய்வோம்.
  2. மிகப் பிரகாசமாக உள்ள ஜோதி, சூட்சும ஜ்வாலையாக, யோகிகளுக்கு பிரியமாக குலகுண்டத்தில் (மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி)
    ஒளிர்கிறது.
  3. கணபதீ! இவ்வுலகில் உன்னை மறந்தவன் எப்போதும் பாக்கியமற்றவனாக சோகத்தில் மூழ்கி இருப்பான்.
  4. குளிர்ந்த மலையின் மகளுடைய (பார்வதி) புதல்வன் விஸ்தாரமான கருணையோடு இதயத்துக்குகந்த வித்யையை எனக்கு முழுவதுமாக அருளுவானாக!
  5. யானை முகத்தோன், சிவ புத்திரன் கஷ்டங்களை நீக்கி, இஷ்டங்களை அளிப்பானாக!
  6. வயோதிகத்தையும், மனோ வியாதிகளையும், உடல் உபாதைகளையும் விலக்கி, கஜமுகன் என் யோகத்தை வளர்ப்பானாக!
  7. ஓ! ஹஸ்தி முகத்தோனே! மிகுந்த ரஸ பக்தியோடு யாசிக்கிறேன். உன் திவ்ய சக்தியோடு என்னை ஆவேசிப்பாயாக!
  8. ஈஸ்வர கணத்தைச் சேர்ந்த உன் கிங்கரனுக்கு பாரத தேச நலனுக்காக உண்மையான தேஜஸை அருள்வாயாக!
  9. அனைத்தையும் அளிக்கும் சுவாமி நீ! நான் முக்தியை கேட்கவில்லை. தேச நலனுக்குத் தேவையான சக்தியை அருளும்படி பிரார்த்திக்கிறேன்.
  • Source:- ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிக, 2015.
  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img