நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக அருண் சக்திகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றிய விக்ரமன், சென்னையில் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்.பி.,யாக மதுரை மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த டாக்டர் அருண் சக்தி குமார் நெல்லை எஸ்.பியாக பொறுப்பேற்றார்.
எஸ்.பி.,அருண்சக்திகுமார், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர். 2010ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்தார். 2012ல் ஐ.பி.எஸ்.,தேர்வானார். தொடர்ந்து நெல்லையில் 6 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். தூத்துக்குடியில் உதவி எஸ்.பியாகவும், மதுரையில் துணைகமிஷனராகவும் இருந்துள்ளார்.
இது குறித்து எஸ்.பி அருண்சக்தி குமார் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு, பாதுகாப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படும். ஏற்கனவே இருந்த எஸ்.பி மேற்கொண்ட அனைத்து நல்ல அம்சங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
ஹலோ போலீஸ் எனப்படும் வாட்ஸ்அப் முறையில் புகார் அளிக்கலாம்.
மணல் கொள்ளையர்கள், சாராயம் காய்ச்சுவோர், ஜாதி ரீதியாக மோதல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



