கொரோனா; ஐம்பதை தாண்டியவரா நீங்கள்? வெளியில் நடமாட தடை விதித்த அரசு!

corono 7 - 2026

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 25-வது இடத்தில் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவத் தொடங்கியுள்ளது.

உயிர்க்கொல்லி நோயாகக் கருதப்படும் கொரோனா வைரஸ், பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த மாநில முதல்வரான அசோக் கெலாட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,`உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ராஜஸ்தான் அரசு தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டிருக்கிறது. அதை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் கூட்டமாக கூடக் கூடாது. மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, 50 வயதைக் கடந்தவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை விதிக்கப்படுகிறது. அரசின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்தத் தடை விதிக்கப்படுகிறது.

முதல்வர் அசோக் கெலாட்கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ராஜஸ்தான் அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழியாகும். அதனால் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது மாநில அரசு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் பொது இடங்களில் நடமாடத் தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த மாநிலத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories