முதியவர் மரணத்துக்கு மதசாயம் பூசி கலவரத்தை தூண்ட நினைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை!

madurai fake claim on police1 - 2026

மதுரையில் மயங்கி விழுந்த அப்துல் ரஹீம் என்ற முதியவர்
மரணத்திற்கு, மதச் சாயம் பூசி காவல்துறையினர் படுகொலை
செய்ததாக அவதூறு பரப்புவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்…

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்
போது மதுரையில் மயங்கி விழுந்து மரணித்த ஒரு பெரியவர்
மரணத்திற்கு மதசாயம் பூசி காவல்துறையினர் படுகொலை செய்ததாக அவதூறு பரப்பக் கூடிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த அருணன் போன்றோருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரை கருப்பாயூரணி பகுதியை சார்ந்த முகம்மது சேட் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அவரது மாமனார் அப்துல் ரஹீம் (75 வயது) வெளியில் இருந்திருக்கிறார்.

ரோந்து பணியில் வந்த காவலர்கள் கடையின் முன்பு கூட்டமாக இருந்தது கண்டு, விதிமீறிய காரணத்தால் கடையை மூடச் சொல்லி இருக்கிறார்கள். அதேநேரம், வயது மூப்பின் காரணமாக திடீரென மயக்கம் அடைந்து, உயிரிழந்திருக்கிறார் அப்துல் ரஹீம். ஆனால், போலீசார் தாக்கியதால்தான் மாமனார் உயிரிழந்துவிட்டார் என்று கூட்டம் கூடி போராட்டம் செய்திருக்கிறார்கள் முகம்மது சேட் மற்றும் உறவினர்கள்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

காவல்துறை டிஎஸ்பி., “காவலர்கள் தாக்கி இறந்தார் என்று நீங்கள் சந்தேகித்தால் புகார் கொடுங்கள்! பிரேத பரிசோதனை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொல்ல, முகம்மது சேட் என்பவர் காவல்துறையினர் கடையை அடைக்க சொன்னதால் நான்தான் அவ்வாறு கூறினேன் என்னை மன்னித்து விடுங்கள் என் மாமனார் மயக்கம் அடைந்து தான் மரணமடைந்தார் என கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் “காவல் துறையினர் செய்த படுகொலை” என்று எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் அவதூறு பொய்ப் பிரச்சாரம் செய்யக்கூடிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை, காவல்துறையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

“மனிதம்” பார்க்க வேண்டிய நேரத்தில் “மதம்” பார்த்து, நாட்டில் அமைதியை கெடுக்கக் கூடிய செயலைச் செய்யும் இதுபோன்ற நபர்கள் நோயை விட ஆபத்தானவர்கள் என்பதை
பொது மக்கள் உணரக் கூடிய காலம் வெகு விரைவில் இல்லை.

“ஒரே இடத்தில்” இருந்து வந்தவர்கள் என்று சொல்லக்கூடிய ஊடகங்கள், ஒரு பெரியவர் உயிரிழப்பு என்றோ, மதத்தைக் குறிப்பிடாமல், ஒரு தரப்பைச் சேர்ந்த பெரியவர் என்றோ, ஒளிபரப்பாமல் தவறான செய்தியை இந்தப் பெரியவர் மரணத்தில் ஒளிபரப்புகின்றன. இப்படி ஊடக நெறிமுறை எதுவும் இல்லாமல் ஒளிபரப்பும் இவர்களும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே! … என்று ராம.ரவிக்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories