திருவாரூர் ஆழித் தேரோட்டம் தொடங்கியது: விநாயகர் தேர் சாய்ந்ததால் பரபரப்பு

thiruvarur aazi ther - 2026

திருவாரூர்:
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்திப் பெருக்குடன் இழுத்தனர்.

திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்தனர். ஆரூரா…. தியாகேசா… என்று முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ வீதியில் இருந்து தொடங்கிய ஆழித் தேரோட்டம் 4 மாடவீதிகளில் வலம் வருகிறது.

இன்று காலை தமிழக அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ் விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் பங்கேற்றார். 92 அடி கொண்ட ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே மிக உயரமானதாகும்.

முன்னதாக, இந்த ஆழித் தேரோட்டத்தை ஒட்டி, நேற்று விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. விநாயகர் தேரின் மேல் அலங்கரிக்கப்பட்ட கட்டுமானப் பகுதி சரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 5:30க்கு நிலையில் இருந்து புறப்பட்ட விநாயகர் தேர், கீழ வீதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து, மேல வீதிக்குத் திரும்பியது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தேரின் மேல் கட்டுமானப் பகுதி லேசாக தேரின் வலதுபுறம் சாய்ந்தது. உடனடியாக தேர் நிறுத்தப்பட்டு, இரும்புக்கம்பி மற்றும் கயிற்றைக் கொண்டு சரிந்த கட்டுமானப் பகுதி இழுத்துக் கட்டப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு முற்பகல் 10:45க்கு நிலைக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

ஆழித் தேர் புனரமைக்கப்பட்ட போது, விநாயகர் தேர் புதுப்பிக்கப்படவில்லை. விநாயகர் தேர் பழமையானது என்பதால் தேரில் விரிசல் ஏற்பட்டு கட்டுமானப் பணி சாய்ந்துள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர். விநாயகர் தேர் சாய்ந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories