திருவாரூர் ஆழித் தேரோட்டம் தொடங்கியது: விநாயகர் தேர் சாய்ந்ததால் பரபரப்பு

thiruvarur aazi ther - 2026

திருவாரூர்:
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்திப் பெருக்குடன் இழுத்தனர்.

திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்தனர். ஆரூரா…. தியாகேசா… என்று முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ வீதியில் இருந்து தொடங்கிய ஆழித் தேரோட்டம் 4 மாடவீதிகளில் வலம் வருகிறது.

இன்று காலை தமிழக அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ் விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் பங்கேற்றார். 92 அடி கொண்ட ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே மிக உயரமானதாகும்.

முன்னதாக, இந்த ஆழித் தேரோட்டத்தை ஒட்டி, நேற்று விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. விநாயகர் தேரின் மேல் அலங்கரிக்கப்பட்ட கட்டுமானப் பகுதி சரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 5:30க்கு நிலையில் இருந்து புறப்பட்ட விநாயகர் தேர், கீழ வீதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து, மேல வீதிக்குத் திரும்பியது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தேரின் மேல் கட்டுமானப் பகுதி லேசாக தேரின் வலதுபுறம் சாய்ந்தது. உடனடியாக தேர் நிறுத்தப்பட்டு, இரும்புக்கம்பி மற்றும் கயிற்றைக் கொண்டு சரிந்த கட்டுமானப் பகுதி இழுத்துக் கட்டப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு முற்பகல் 10:45க்கு நிலைக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ஆழித் தேர் புனரமைக்கப்பட்ட போது, விநாயகர் தேர் புதுப்பிக்கப்படவில்லை. விநாயகர் தேர் பழமையானது என்பதால் தேரில் விரிசல் ஏற்பட்டு கட்டுமானப் பணி சாய்ந்துள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர். விநாயகர் தேர் சாய்ந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories