February 22, 2026, 3:36 PM
30.4 C
Chennai

திருவாரூர் ஆழித் தேரோட்டம் தொடங்கியது: விநாயகர் தேர் சாய்ந்ததால் பரபரப்பு

thiruvarur aazi ther - 2026

திருவாரூர்:
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்திப் பெருக்குடன் இழுத்தனர்.

திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்தனர். ஆரூரா…. தியாகேசா… என்று முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ வீதியில் இருந்து தொடங்கிய ஆழித் தேரோட்டம் 4 மாடவீதிகளில் வலம் வருகிறது.

இன்று காலை தமிழக அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ் விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் பங்கேற்றார். 92 அடி கொண்ட ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே மிக உயரமானதாகும்.

முன்னதாக, இந்த ஆழித் தேரோட்டத்தை ஒட்டி, நேற்று விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. விநாயகர் தேரின் மேல் அலங்கரிக்கப்பட்ட கட்டுமானப் பகுதி சரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 5:30க்கு நிலையில் இருந்து புறப்பட்ட விநாயகர் தேர், கீழ வீதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து, மேல வீதிக்குத் திரும்பியது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தேரின் மேல் கட்டுமானப் பகுதி லேசாக தேரின் வலதுபுறம் சாய்ந்தது. உடனடியாக தேர் நிறுத்தப்பட்டு, இரும்புக்கம்பி மற்றும் கயிற்றைக் கொண்டு சரிந்த கட்டுமானப் பகுதி இழுத்துக் கட்டப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு முற்பகல் 10:45க்கு நிலைக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

ஆழித் தேர் புனரமைக்கப்பட்ட போது, விநாயகர் தேர் புதுப்பிக்கப்படவில்லை. விநாயகர் தேர் பழமையானது என்பதால் தேரில் விரிசல் ஏற்பட்டு கட்டுமானப் பணி சாய்ந்துள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர். விநாயகர் தேர் சாய்ந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories