“என்ன கேட்டது கிடைச்சுதா? -பெரியவா (பிரசாதப் பையை தொலைத்த பெண்மணியிடம்)

77134 693849987312454 1034041963 n 1 - 2026

“என்ன கேட்டது கிடைச்சுதா? -பெரியவா (பிரசாதப் பையை தொலைத்த
பெண்மணியிடம்) (யாருக்கு
எது கிடைக்கணும்னு இருக்கோ, அதை
என்னதான் முயற்சி பண்ணினாலும் தடுக்க முடியாது.
கிடைக்காதுன்னு இருக்கிறதை தக்கவைச்சுக்கவும்
முடியாது. இதே மாதிரி ஒரு சம்பவம்)


கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-21-04-2016தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)

ஒரு சமயம் ரொம்ப தொலைவுல இருக்கிற ஊர்ல
இருந்து வசதி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவா சிலர்,
மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்திருந்தா.
ஆசிர்வாதம் பண்ணி கற்கண்டும்,குங்குமமும் தந்த
மகாபெரியவா அவாகிட்டே ஒரு விஷயத்தைச்
சொன்னார்.

“நீங்க இங்கேர்ந்து புறப்படறச்சே வழியில் யாராவது
நோயாளியைப் பார்த்தேன்னா,அவாளுக்கு உங்களால்
முடிஞ்ச உபகாரத்தைப் பண்ணிட்டுப் போங்கே!” அப்படின்னார்.

“சரின்னு தலையை ஆட்டிட்டு வழக்கம்போல
பிரசாதத்தை வாங்கிண்டு புறப்பட்டா எல்லாரும்.
மடத்தோட வாசலைத் தாண்டறதுக்குள்ளே,ஆசார்யா சொன்னது மறந்துபோயிடுத்து
அவாளுக்கு. அதனால யாருக்கும் எந்த உதவியும் பண்ணாம ரயிலேறி நேரா ஊருக்குப்
போய்ச்சேர்ந்துட்டா.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

அங்கே போனதும், பெரியவா தந்த பிரசாத குங்குமத்தை
எடுத்து சுவாமி மாடத்துல வைக்கலாம்னு பையைத்
தேடினப்பதான் தெரிஞ்சுது, பையையே எங்கேயோ
தொலைச்சுட்டோம்கறது.அதுல பிரசாதம் மட்டுமில்லாம
கிட்டத்தட்ட ரெண்டாயிரம் ரூபாய் பணமும் வைச்சிருக்கா
அவா. அது அந்தக் காலத்துல ரொம்ப பெரிய தொகை.

அப்போதான் யோசிச்சிருக்கா. அடடா,பரமாசார்யா சொன்னபடி உதவி பண்ணாம வந்துட்டோமே,
அதான் இப்படியெல்லாம் நடந்திருக்குன்னு. சரி அவசரத்துல
மறந்துட்டோம். தெரியாம பண்ணிட்டோம்னு பரமாசார்யாகிட்டேயே மனசார வேண்டிப்போம்.
அவரே பையைத் திரும்ப கிடைக்க வைப்பார், அப்படின்னு தீர்மானம் செஞ்சா. அதே
மாதிரி வேண்டிண்டா.

ரெண்டு மூணு நாள் ஆச்சு. தபால்ல ஒரு கவர் வந்தது,
அவா ஆத்து முகவரிக்கு. என்னவா இருக்கும்னு
பிரிச்சுப் பார்த்தா,உள்ளே அவா தொலைச்ச பை இருந்தது
அவசர அவசரமா பணம் இருக்கான்னு பார்க்க, பையைக்
குடைஞ்சா. ஊஹூம், உள்ளே மகாபெரியவா தந்த பிரசாதமும் கூடவே ஒரு கடுதாசியும்
மட்டும் இருந்தது.

“உங்கள் பையை வீதியில் பார்த்தேன்.அதில் உங்கள் முகவரி அட்டையும்
இருந்தது.உரியவரிடம் சேர்த்து விடலாம் என்றுதான் எடுத்தேன்.ஆனால் திடீரென்று
என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக
உங்கள் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது
மன்னிக்கவும்.பையில் இருந்த பிரசாதத்தை இத்துடன்
அனுப்பி இருக்கிறேன்!” கடிதத்தைப் படித்தார்கள்.

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

ஆசார்யா குடுத்த பிரசாதம் திரும்பக் கிடைச்சுது
சந்தோஷமா இருந்தாலும், பணம் திரும்பக்
கிடைக்கலையேங்கற வருத்தம் அவாளுக்குள்ளே
இருந்தது.கொஞ்சநாள் கழிச்சு மறுபடியும் ஆசார்யாளை
தரிசனம் பண்ண வந்தா அந்தக் குடும்பத்தினர். அவாளோட
முறை வந்ததும், பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.

“என்ன கேட்டது கிடைச்சுதா? அப்படின்னு அந்தக் குடும்பத்
தலைவியைப் பார்த்து கேட்டார் மகாபெரியவா.

“இல்லை பெரியவா..பையும் பிரசாதமும் மட்டும்தான் கிடைச்சுது. பணம் போனது
போனதுதான்!” அவசர அவசரமா சொன்னார் அவாள்ல ஒருத்தர்.

“இல்லையே.பணத்தைப்பத்தி கேட்கலையே..பிரசாதப் பை
கிடைச்சா போதும். பணம் உதவி பண்ணினதா இருந்துட்டுப்
போகட்டும்னுதானே வேண்டிண்டா?” பெரியவா சொல்லி முடிக்கறதுக்கு முன்னாலயே,
“ஆமாம்.நான் அப்படித்தான் வேண்டிண்டேன்.பெரியவாளோட ஆணைப்படி யாருக்கோ
உதவினதா இருக்கட்டும்னு நினைச்சுண்டேன்”
தழுதழுக்கச் சொன்னா, அந்தப் பெண்மணி.

ஏழை நோயாளியோட சிகிச்சைக்கு இவாளோட பணம்
போய்ச்சேரணும்கறதை முன்கூட்டியே எப்படித்
தீர்மானிச்சார்? பிரசாதம் திரும்பக் கிடைக்கணும்னு
வேண்டிண்டவாளுக்கு அதை எப்படி திருப்பிக் கிடைக்க
வைச்சார்? இதெல்லாம் பரமாசார்யாளுக்கு மட்டுமே
தெரிஞ்ச பரம ரகசியம்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories