spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமவுண்ட் ரோடு கூட்டமும் மாமா அரசியலும்!

மவுண்ட் ரோடு கூட்டமும் மாமா அரசியலும்!

- Advertisement -

மக்கள் ஊரடங்கு சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சென்றவர்களால் எந்தவிதமான நோய் தொற்றும் வரவில்லை. மாறாக ஒரே ஊரில் இருந்து ஒரேகுழுவாக சென்றவர்களால் தான் அதிகம் பரவியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இதில் “மாமா மாமா” என்று, உங்களுக்கு “நான் தான்” எல்லாம் செய்தேன் .உங்க எல்லாம் ஓட்டும் என் ஓட்டு தான் என்று ,விளக்கு பிடிக்காத குறையாக பேசிய திமுக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அரசாங்க அதிகாரிகள் சோதனையிட வந்தபொழுது
உங்க பகுதி எல்லாம் தொந்தரவு செய்யக்கூடாது என்று நான்தான் தடுத்தேன் என்று சொல்கிறார்? பந்தல் போட பத்தாயிரம் கொடுத்தேன் என்கிறார்.

உங்களால தான் எல்லாம் பிரச்சனை உங்களால தான் நோய்பரவுதல் சொல்லி ஊருக்குள்ள பேசிக்கிறாங்க என்று மண்டியிடாத குறையாக சுயமரியாதைசிங்கம்” கேகேஎஸ்எஸ்ஆர் பேசுவது ஸ்டாலின் காதில் விழ வில்லையா?

முத்தலிபு கிட்ட கேளுங்க! நான் தான் எல்லாம் பேசினேன் ஜமாத்தார் நிர்வாகத்திடம் நான் பேசுகிறேன் பேசுறேன் மாமா.

தள்ளி நில்லுங்க ன்னு சொன்னது உண்மைதான். நான் இல்லைன்னு சொல்லலியே நோய் வரக் கூடாதுன்னு சொல்லி அக்கறையில் சொன்னேன்.

என்ன சமாளிப்பு எப்பா முடியலடா சாமி!! திமுக எம்எல்ஏக்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் அரசு ஊழியர்கள் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்பதற்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலமே சாட்சி.

திமுக விலிருந்து கட்சி விரோதமாக செயல்பட்டார் என்று கேபி ராமலிங்கத்தை நீக்கிய இவர்களால் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஏன் நீக்கமுடியவில்லை?மேலும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்க,தங்கள்
அதிகாரபலத்தை தவறாக பயன்படுத்தியதற்காக இவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் இதுகுறித்து சிறப்பு நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்த வேண்டும். மாமாக்கள் கொண்ட கோபத்தை தணிக்க திமுக கூட்டக்கூடிய திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது தன்னருகே டெல்லி சென்று வந்தவர்களில் உறவுக்கார கட்சி தலைவர்களை அமரவைத்து நாங்கள் என்றும்மாமாகளுக்கு ஆதரவானவர் கள் என்று “அண்ணாசாலை அதிபதி” “மவுண்ட் ரோடு மடாதிபதி” அறிவித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

கூடுதல் தகவல் கைகுலுக்கி மார்போடு மார்பு
சேர”மாமன் மச்சான்” உறவை உலகிற்கு பறைசாற்றும் வகையில் காட்சிகளும் அரங்கேறலாம்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் “சமூக தனிமைப்படுத்துதல்” பின்பற்றி கூட்டத்தை பங்கேற்காமல் இருந்தால் உங்களுக்கும் நல்லது. குடும்பத்திற்கும் நல்லது
நாட்டிற்கும் நல்லது. 70 வயது தலைவர்களுக்கு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப் படுகிறார்கள்.

மத்திய மாநில அரசுகள் நல்ல முறையில் சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய சூழலில், நான் அரசாங்கத்தை செய்ய வைப்பேன், அகிலத்தை கிடுகிடுக்க வைப்பேன் என்று வீர வசனம் பேசி, விளம்பர அரசியல் செய்ய, வீணாக கூட்டம் கூடுவதை தவிர்த்தாலே தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய நன்மையாக இருக்கும்.

“திமுக கூட்டணி” கட்சிக் கூட்டத்தை,” அனைத்துக்கட்சி கூட்டம் “என்று பொய் விளம்பரம் இதில் வேறு! அனைத்துக் கட்சி கூட்டம் என்றால் எந்த எந்த கட்சிகள் பங்கேற்கிறார்கள் என்று பட்டியல் வெளியீடுவாரா?

சொல்வதை சொல்லிவிட்டோம். சொல்லி புரியவில்லை என்றால் “கொரோனாநோய் மட்டும் ஆபத்தானது அல்ல “என்பதை தமிழக மக்கள் உணர்வார்கள். தேர்தல் நடந்தால் அதில் உணர்த்துவார்கள்.

  • இராம ரவிக்குமார்
    இந்து தமிழர் கட்சி, நிறுவன தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe