December 6, 2025, 5:54 AM
24.9 C
Chennai

கொரோனா டெஸ்ட்- 10 லட்சம் பிசிஆர் கிட் தயார்: தென்கொரியாவில் இருந்து வரவழைப்பு

pcr test kitq
pcr test kitq

சென்னை…கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்காக தமிழக அரசு, தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கிட்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. தற்போது முதல்கட்டமாக சனிக்கிழமை காலை 1 லட்சம் கிட்கள் தமிழக சுகாதாரத் துறைக்கு வந்து சேர்ந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று உள்ளதா என்பதை பிசிஆர் டெஸ்ட் மூலமே உறுதிபடுத்திக் கொள்ள முடியும். இந்த கிட் இருந்தால்தான் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகளைச் செய்ய இயலும்.

இந்த கிட்கள் போதிய அளவு இல்லாததால் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனையை சுகாதாரத்துறை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தமிழ் தினசரி இணையதளத்திலும் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

சமூக ஆர்வலரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகருமான முனைவர் பொன்ராஜ், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்ததையும் தினசரி இணைய தளம் செய்தியாகப் பதிவிட்டிருந்தது.

மேலும் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் வீடு வீடாகப் பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே கொரோனா நோய்த் தொற்றின் உண்மை எண்ணிக்கையை கணக்கிட முடியும் என்று சுட்டி்க் காட்டப்பட்டது.

pcr test kit
pcr test kit

இந்நிலையில், பிசிஆர் டெஸ்ட் கிட்களுக்கு தமிழக அரசு சில தினங்களுக்கு முன் தென்கொரியாவிற்கு ஆர்டர் கொடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக சனிக்கிழமை அதிகாலை 1 லட்சம் பிசிஆர் கிட்கள் விமானம் மூலம் தமிழகம் வந்து சேர்ந்தது. இந்த கிட்கள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்குச் சொந்தமான பண்டகச் சாலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கிட்கள் தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்பட்டு, பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரத் துறை இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories