December 6, 2025, 2:38 PM
29 C
Chennai

கடை திறந்தும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை: மனம் குமுறும் மதுரை வியாபாரிகள்!

madurai sivagangai road - 2025
மதுரை சிவகங்கை சாலையில் கருப்பாயூரணியில் வெறிச்சோடி காணப்படும் ஜூஸ் கடை…

மதுரை நகரில் பல இடங்களில் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டும், வியாபாரிகள் எதிர்பார்த்தப்படி வணிகம் நடைபெறவில்லை என,பல வணிகர்கள் கவலை தெரிவித்தனர்.

தினசரி நடைபெறும் வணிகமானது, சம்பள ஆட்களுக்கும், வாங்கிய பொருட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. மின்சார கட்டணம், கடை வாடகைக்கு கடன் வாங்கும் நிலைதான் ஏற்படுகிறது என்றும். இதற்கு காரணம் போக்கு வரத்து இல்லாதது தான் காரணம் என்றும் அவர்கள் கூறினர்.

madurai chekkikulam opticals - 2025
மதுரை சொக்கிகுளம் பகுதியில் கூட்டமின்றி செயல்படும் ஆப்டிக்கல்.

மேலும், அரசு எவ்வளவு தளர்வுகள் அளித்தாலும், போலீஸார் கெடுபிடியும் வணிகக் குறைவுக்குக் காரணம் என்றார் வியாபாரி முருகப்பன். கோமதிபுரத்தைச் சேர்ந்த குமார் கூறிய போது… மதுரை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வயதான இருவர் மருந்துகள் வாங்கிக் கொண்டு திரும்பினர் அப்போது, மதுரை அண்ணாநகர் செக்சன் ஆபீஸ் பஸ்நிறுத்தம் அருகே ஆட்டோவை மறித்து போலீஸார் ரூ. 500 அபராதம் விதித்துள்ளனர். இது போன்ற காவல்துறையினரின் கெடுபிடியால் பல வியாபாரிகள் கடையை திறக்க அஞ்சுகின்றனர்.

madurai sivagangai road1 - 2025
மதுரை..சிவகங்கை சாலையில் கூட்டமின்றி காணப்படும் பேக்கரி.

மதுரை அண்ணாநகர், கருப்பாயூரணி, நான்குவழிச்சாலை, சிவகங்கை ரோடு, சொக்கிகுளம், தல்லாகுளம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் திறந்திருந்தாலும், பொதுமக்களின் வருகை மிக குறைவாகவே உள்ளது. அதே சமயத்தில் இறைச்சி கடைகள், மருந்தகங்களில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. ஆகவே, அரசு தளர்வுகள் அறிவித்தாலும், போக்குவரத்து இன்மையாலும், போலீஸாரின் கெடுபிடியே வணிகக் குறைவுக்கு காரணம் என்கின்றனர் வணிகர்கள் பலர்.

madurai karupayurani - 2025
மதுரை அருகே கருப்பாயூரணியில் வெறிச்சோடி காணப்படும் அரிசிக் கடை

இந்நிலையில் மதுரையில் வியாழன் முதல் ஜவுளி மற்றும் சூ மார்ட்டுகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது!

மதுரை மாவட்டத்தில் மே.14 வியாழக்கிழமை நாளை முதல் ஜவுளி மற்றும் துணிக் கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஜவுளி, துணிக்கடைகள், சூ மார்ட் ஆகியவை வழக்கம் போல செயல்படலாம் என்றும், பணிக்கு வரும் வேலையாட்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும், கடைகளில் கட்டாயம் கிருமி நாசினி பயன்படுத்துவதுடன், தகுந்த இடைவெளி விட்டு, அரசு அறிவித்துள்ளபடி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே, கடைகளை திறக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்திக் குறிப்பினை வெளியிட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories