April 26, 2025, 10:59 AM
33.1 C
Chennai

கடை திறந்தும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை: மனம் குமுறும் மதுரை வியாபாரிகள்!

மதுரை சிவகங்கை சாலையில் கருப்பாயூரணியில் வெறிச்சோடி காணப்படும் ஜூஸ் கடை…

மதுரை நகரில் பல இடங்களில் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டும், வியாபாரிகள் எதிர்பார்த்தப்படி வணிகம் நடைபெறவில்லை என,பல வணிகர்கள் கவலை தெரிவித்தனர்.

தினசரி நடைபெறும் வணிகமானது, சம்பள ஆட்களுக்கும், வாங்கிய பொருட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. மின்சார கட்டணம், கடை வாடகைக்கு கடன் வாங்கும் நிலைதான் ஏற்படுகிறது என்றும். இதற்கு காரணம் போக்கு வரத்து இல்லாதது தான் காரணம் என்றும் அவர்கள் கூறினர்.

மதுரை சொக்கிகுளம் பகுதியில் கூட்டமின்றி செயல்படும் ஆப்டிக்கல்.

மேலும், அரசு எவ்வளவு தளர்வுகள் அளித்தாலும், போலீஸார் கெடுபிடியும் வணிகக் குறைவுக்குக் காரணம் என்றார் வியாபாரி முருகப்பன். கோமதிபுரத்தைச் சேர்ந்த குமார் கூறிய போது… மதுரை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வயதான இருவர் மருந்துகள் வாங்கிக் கொண்டு திரும்பினர் அப்போது, மதுரை அண்ணாநகர் செக்சன் ஆபீஸ் பஸ்நிறுத்தம் அருகே ஆட்டோவை மறித்து போலீஸார் ரூ. 500 அபராதம் விதித்துள்ளனர். இது போன்ற காவல்துறையினரின் கெடுபிடியால் பல வியாபாரிகள் கடையை திறக்க அஞ்சுகின்றனர்.

ALSO READ:  உங்கள் குடும்பத்துக்கு ஒரு கொள்கை; ஏழைகளுக்கு ஒரு கொள்கையா? சம கல்வி நம் உரிமை!
மதுரை..சிவகங்கை சாலையில் கூட்டமின்றி காணப்படும் பேக்கரி.

மதுரை அண்ணாநகர், கருப்பாயூரணி, நான்குவழிச்சாலை, சிவகங்கை ரோடு, சொக்கிகுளம், தல்லாகுளம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் திறந்திருந்தாலும், பொதுமக்களின் வருகை மிக குறைவாகவே உள்ளது. அதே சமயத்தில் இறைச்சி கடைகள், மருந்தகங்களில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. ஆகவே, அரசு தளர்வுகள் அறிவித்தாலும், போக்குவரத்து இன்மையாலும், போலீஸாரின் கெடுபிடியே வணிகக் குறைவுக்கு காரணம் என்கின்றனர் வணிகர்கள் பலர்.

மதுரை அருகே கருப்பாயூரணியில் வெறிச்சோடி காணப்படும் அரிசிக் கடை

இந்நிலையில் மதுரையில் வியாழன் முதல் ஜவுளி மற்றும் சூ மார்ட்டுகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது!

மதுரை மாவட்டத்தில் மே.14 வியாழக்கிழமை நாளை முதல் ஜவுளி மற்றும் துணிக் கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஜவுளி, துணிக்கடைகள், சூ மார்ட் ஆகியவை வழக்கம் போல செயல்படலாம் என்றும், பணிக்கு வரும் வேலையாட்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும், கடைகளில் கட்டாயம் கிருமி நாசினி பயன்படுத்துவதுடன், தகுந்த இடைவெளி விட்டு, அரசு அறிவித்துள்ளபடி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே, கடைகளை திறக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  IPL 2025: மீண்டும் மும்பைக்கு எதிராக வென்ற பெங்களூர்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்திக் குறிப்பினை வெளியிட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories