December 6, 2025, 8:27 AM
23.8 C
Chennai

துபாய் டூ தேனி: மரணத்தின் பிடியிலிருந்து இளைஞரை மீட்டு வந்த தமிழக பாஜக.,!

youth ganesh rescued from dubai

சிறப்பான மீட்பு…
மரணத்தை எதிர் நோக்கியிருந்த இளைஞரை துபாயிலிருந்து சிறப்பாக மீட்டது தமிழக பாஜக!

youth ganesh rescued from dubai

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தேனி மாவட்டம் போடி நகரிலிருந்து கணேஷ் குமார் என்ற இளைஞர் டூர் விசாவில் துபாய் சென்றார். விசா முடிவடைந்து திரும்பும் காலத்தில் கொரானா தொற்றின் காரணமாக மற்ற பயணிகள் போல அவரும் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பிரச்சினை அதுவல்ல.

இந்த இடைப்பட்ட காலத்தில் கணேஷ்குமார் மஞ்சள் காமாலையால் பீடிக்கப்பட்டு ஈரல் பிரச்சினையாகி, கிட்டத்தட்ட 15 கிலோ சடாரென்று குறைந்து அங்கேயே வைத்தியமும் பார்த்து வந்திருக்கிறார். மரணத்தைத் தழுவப் போகிறோம் என்ற அச்சம் மேலோங்க, தனிமை, நோயின் பாதிப்பு முதலியவற்றால் மிகுந்த உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

youth ganesh rescued from dubai

இவரது மோசமான சூழலைக் கேள்விப்பட்ட தேனி மாவட்ட சேவா பாரதியின் தலைவர் சுந்தரேசன், தேனி மாவட்ட பாஜக தலைவர் பாண்டியனிடம், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். மாவட்டத் தலைவரும், மாநிலத் தலைவர் முருகன் வழிகாட்டுதலுடன் மத்திய அமைச்சகத்தின் உதவியைக் கோரி முறையாக விண்ணப்பித்திருக்கிறார்.

இதற்கிடையில் துபாயிலுள்ள தன் நண்பர்கள் மூலமும் கணேஷ் குமாருக்கு உதவும்படி தேனி மாவட்ட பாஜக தலைவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் நண்பர்கள் குழு கணேஷ் குமாரைச் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியது. அத்துடன், துபாய் அரசிடன் அவரது சிரமங்களைச் சொல்லி உடனே பயணத்திற்கு ஏற்பாடு செய்தது. தொடர்ந்து இன்று 22-05-2020 வெள்ளிக் கிழமை விமானம் மூலம் கொச்சின் விமான நிலையத்திற்கு அவரை அனுப்பி வைக்கிறார்கள்.

youth ganesh rescued from dubai

கொச்சினிலிருந்து சேவா பாரதியின் நிர்வாகி ஏ.ஆர். மோகன் கொச்சின் மாவட்ட ஆட்சியர் மற்றும் கொச்சின் விமான நிலைய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று கணேஷ்குமாரை அவரது சொந்த ஊரான போடிக்கு வழியனுப்பி வைக்க ஏற்கெனவே ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறார்.

youth ganesh rescued from dubai

இதற்கிடையே, தேனி மாவட்டத்தில் இ-பாஸ் வாங்குவது மற்றும் வாகன ஏற்பாடுகளை போடி நகர் பாஜக தலைவர் தண்டபாணி ஏற்பாடு செய்து தயாராக இருக்கிறார். தனிப்பட்ட முறையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கணேஷ்குமாரை மீட்டு வர முயற்சி எடுத்துக் கொண்டாலும், முறையாக அரசாங்கத்திடமும் கணேஷ்குமார் குடும்பத்தினரை மனு கொடுக்கச் சொல்லி அறுவுறுத்தி அவ்வாறே செய்துள்ளனர். இது குறித்த செய்தியும் ஊடகங்களில் வெளியானது!

youth ganesh rescued from dubai

இத்தனை பேரின் உழைப்பும் உடல், மன சிரமத்தில் தவித்துக் கிடந்த கணேஷ்குமாரை இக்கட்டில் இருந்து மீட்பதற்காகத்தான். இதற்காகப் பாடுபட்ட பாஜக.,வினரை இப்போது பலரும் பாராட்டுகிறார்கள்.

முக்கியமாக கணேஷ் குமாரின் பயணச் செலவு மற்றும் பயண ஏற்பாட்டினைச் செய்த துபாய் வாழ் நண்பர்கள் பட்ட சிரமம். அவர்கள் இத்தனைக்கும் தங்களது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த முகம் தெரியாத நல்லுங்களுக்கு தமிழக மக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

  • செய்திக் கட்டுரை: ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories