சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி: இந்தியா- பாகிஸ்தான் மோதல்

IMG 20170615 225808 - 2026

சாம்பியன்ஸ் டிராபி 2-வது அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்
வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு இந்திய அணி
முன்னேறியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற
முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி போட்டியை நடத்தும் இங்கிலாந்தை
வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், இன்று நடந்த 2 வது
அரையிறுதி போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதியது. டாஸ் வென்ற இந்திய
அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264
ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார்,
பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய
அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – தவான் ஆகியோர் ஆரம்ப முதலே அதிரடியாக
விளையாடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். தவான் 34 பந்துகளில் 46
ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து கேப்டன் கோலி -ரோகித் ஜோடி சிரான வேகத்தில் ரன்களை குவித்தனர்.
ரோகித் 111 பந்துகளில் தனது 11-வது சதத்தை பதிவு செய்தார். கோலியும் அரைசதம்
அடித்து அசத்தினார்.

ரோகித் சர்மா 123, விராட் கோலி 96 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை
உறுதி செய்தனர். இந்திய அணி 40.1 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 9
விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. 123 ரன்கள் எடுத்த
ரோகித்சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சாம்பியன்ஸ் டிராபி 2-வது அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை
வீழ்த்தி இறுதிபோட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இதனையடுத்து வரும் 18-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories