ஐஏஎஸ் அதிகாரிகள் என ஏமாற்ற முயன்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

fake ias officers madurai
fake ias officers madurai

மதுரை: தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி டி.என்.பி.எஸ்.சி-ல் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளது. இதில் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரகாஷ் என்ற நாகப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகியோர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் அவர்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் பெரும் புள்ளிகள் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் போலீசாருக்கு சிக்கியுள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்.

fake ias officers
fake ias officers

முன்னதாக ராமநாதபுரம் நகர் பகுதியில் புளிக்காரத் தெருவைச் சேர்ந்த டைசி என்பவர், தன் மகன் உள்பட மூன்று பேருக்கு டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ் உள்ளிட்ட பணிகளில் வேலை வாங்கித் தருவதாக பிரகாஷ் என்ற நாகப்பன் ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளார்.

அதாவது தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு தலா ஐந்து லட்சம் என மூன்று பேரிடமும் 15 லட்சம் ரூபாய் வரை வாங்கி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் ரகசிய எண்ணுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

இந்நிலையில் நாகப்பன் என்ற பிரகாஷ், ஜார்ஜ் பிலிப் ஆகியோரை தேடிவந்த நிலையில் முக்கிய குற்றவாளியான நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜார்ஜ் பிலிப்பை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

fake ias officers
fake ias officers

கைதானவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல ரகசிய வீடியோக்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதாவது பிரபலங்கள் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு தலைமைச் செயலகம் வரை அனைவரையும் தெரியும் என கூறியிருக்கின்றனர்.

இதன்மூலம் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் பகுதியில் பல பேரிடம் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால் மறுபடியும் மோசடி வேலைகளில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Entertainment News

Popular Categories