April 30, 2025, 11:01 PM
30.5 C
Chennai

ஐஏஎஸ் அதிகாரிகள் என ஏமாற்ற முயன்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

fake ias officers madurai
fake ias officers madurai

மதுரை: தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி டி.என்.பி.எஸ்.சி-ல் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளது. இதில் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரகாஷ் என்ற நாகப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகியோர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் அவர்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் பெரும் புள்ளிகள் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் போலீசாருக்கு சிக்கியுள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்.

fake ias officers
fake ias officers

முன்னதாக ராமநாதபுரம் நகர் பகுதியில் புளிக்காரத் தெருவைச் சேர்ந்த டைசி என்பவர், தன் மகன் உள்பட மூன்று பேருக்கு டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ் உள்ளிட்ட பணிகளில் வேலை வாங்கித் தருவதாக பிரகாஷ் என்ற நாகப்பன் ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளார்.

அதாவது தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு தலா ஐந்து லட்சம் என மூன்று பேரிடமும் 15 லட்சம் ரூபாய் வரை வாங்கி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் ரகசிய எண்ணுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  த்தூ... கோலிவுட்! த்தூ... டைரக்டர்ஸ்! த்தூ... நடிகர்கள்! சாபம் விடும் சமூகத்தள வாசிகள்!

இந்நிலையில் நாகப்பன் என்ற பிரகாஷ், ஜார்ஜ் பிலிப் ஆகியோரை தேடிவந்த நிலையில் முக்கிய குற்றவாளியான நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜார்ஜ் பிலிப்பை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

fake ias officers
fake ias officers

கைதானவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல ரகசிய வீடியோக்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதாவது பிரபலங்கள் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு தலைமைச் செயலகம் வரை அனைவரையும் தெரியும் என கூறியிருக்கின்றனர்.

இதன்மூலம் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் பகுதியில் பல பேரிடம் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால் மறுபடியும் மோசடி வேலைகளில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணத் திருவிழா ஏப்.3ல் தொடக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

Entertainment News

Popular Categories