கி.வா.ஜ விடம்,”தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?”

19260268 1413356405438193 3315023502090745433 n - 2026

கி.வா.ஜ விடம்,”தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?”

பெரியாவாளே பதில் சொல்கிறார்-“தம்மிடம் இப்படி இனிய
தன்மை கொண்ட ‘ழ’வை உடையது என்பதால் தமிழ் என்று
வந்துவிட்டதோ” என்று கேட்கவும் கி.வா.ஜ.விடம் பிரமிப்பு.

கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(44)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவர் பெரும் அருளாளர் மட்டுமல்ல; பெரும் கல்விமான்!
மாபெரும் சிந்தனையாளர்.தன் அந்திமக் காலத்தில்
கிட்டத்தட்ட 96 வயது வரை அவர் படிக்காத நாளே இல்லை.
இவ்வளவுக்கும் முதுமை காரணமாக அவருக்கு ஒரு கண்
பழுதாகி சரியாக தெரியாத நிலை. ஆனால் அதைப்பற்றி
கவலையே படாமல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே
அவர் நிறைய படித்தார்.

பெரும்பாலும் இரவு தூங்கச் செல்லும் சமயங்களில்தான்
அவர் படிப்பார். பெரிதாக விளக்கு போட்டுக்கொண்டு
படிப்பது ஒரு ரகம். தோளுக்கும் கழுத்துக்கும் இடையே
டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு அதன் வட்டமான
வெளிச்சம் கைவசம் திறந்திருக்கும் புத்தகத்தின் மேல்
விழும் நிலையில் அதை வாசிப்பது ஒரு விதம்.பெரியவர்
அடுத்தவருக்கு தொந்தரவு தராமல் டார்ச் லைட்
உதவியோடுதான் வாசிப்பார்.

சமஸ்கிருதம்,ஆங்கிலம்,தமிழ் என்று மூன்றிலும் பெரியவர்
மிகுந்த புலமை உடையவராக திகழ்ந்தார்.எனவே அறிஞர்கள்
பெரியவரை சந்திக்கும் போது அவர்களிடம் அவர்கள்
மலைத்துப் போகும் அளவு பெரியவரால் பேச முடிந்தது.
இந்த மூன்று மொழிகள் அல்லது மற்ற மொழி அறிவும்
பெரியவருக்கு நிறையவே இருந்தது. அதே போல சரித்திர
ஞானம்,விஞ்ஞான ஞானம்,தமிழ் இலக்கிய ஞானம்,
ஆங்கிலத்தில் இலக்கண ஞானம் என்று அவரது ஆற்றலுக்கு
அவர் வாழ்வில் ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக
தமிழ் இலக்கியத்தில் பெரியவர் பெரிதும் ஆழங்கால்பட்டவராக
திகழ்ந்தார்.’கலைமகள்’ என்று ஒரு மாத இதழ் வெளியாகி
வருவதை நாம் அறிவோம்.இப்போதும் அது வெளியாகி
வருகிறது.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

அந்த நாளில் அந்த இதழுக்கு ஆசிரியராக இருந்தவர்
கி.வா.ஜகன்னாதன்.தமிழ் உலகம் அவரை கி.வா.ஜ. என்று
மூன்றெழுத்தில் அழைக்கும்.கி.வா.ஜ.நல்ல மேடைப் பேச்சாளர்
குறிப்பாக சிலேடையாக பேசுவதில் அவர் வித்தகர்.

இரண்டு சிலேடைகள்.

1) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காக ரயிலில் வந்து இறங்கிய
அவரை மாலை போட்டு வரவேற்கிறார்கள்.

அப்போது கி.வா.ஜ. “அடடே காலையிலேயே இன்று மாலையும்
வந்துவிட்டதே!” என்றிட எல்லோரும் அந்தச் சொல்லின் (மாலை)
சிறப்பை (சிலேடை) மிகவே ரசித்தனர்.

2)அதே போல சாப்பிடும் போது மல்லிகைப் பூ போல இட்லியை
பரிமாறினாள் ஒரு பெண்.”என்னம்மா தலையில் வைக்க
வேண்டியத இலையில் வைக்கிற!” என்றார்.அந்தப் பெண்ணுக்கு
பிறகுதான் தெரிந்தது. இட்லி மல்லிகைப்பூ போல இருப்பதையே
அவர் அப்படி கூறுகிறார் என்று.

இப்படி அவரது சிலேடைகளை நூற்றுக்கணக்கில் கூறலாம்.
மிகுந்த தமிழ் அறிவும்,புலமையும் கொண்டவர் கி.வா.ஜ.
இவர் தமிழ்த் தாத்தாவான உ.வே.சா. அவர்களின் மாணவரும்
கூட.
……………………………………………………………………………………………………………..

இப்பேற்பட்ட கி.வா.ஜ.வும் பெரியவரும்-சந்தித்து ஆசி பெற
வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சி.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

…………………………………………………………………………………………………………

கி.வா.ஜ விடம்,”தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?”
என்று பெரியவர் கேட்டார்.

இந்தக் கேள்வியை கி.வா.ஜ. எதிர்பார்க்கவில்லை
என்ன பதில் கூறுவது என்றும் தெரியவில்லை.

‘தமிழின் சிறப்பைச் சொல் என்றால் ஒரு மணி நேரம் கூட
பேசலாம். அவ்வளவு செய்திகள் உள்ளன. தமிழுக்கு தமிழ் என்று
ஏன் பெயர் வந்தது என்றால் அதை என்னவென்று சொல்வது?’

உண்மையில் கி.வா.ஜவுக்கு விடை தெரியவில்லை. அதற்கு
உள்ளபடியே ஒரு விடை இருப்பதாகவும் தெரியவில்லை.
“எனக்கு தெரியவில்லை.நீங்களே சொல்லிவிடுங்கள்”
என்றார் மிகுந்த தன்னடகத்தோடு.

பெரியவரும் கூறத்தொடங்கினார்.

“நான் சொல்லப் போற பதில் என்னுடைய கருத்துதானே
ஒழிய இதை தமிழ்ப் புலவர்களோ,அறிஞர்களோ யாரும்
சொல்லலை.என் கருத்தை எல்லாரும் ஏத்துக்கணும்கிற
கட்டாயமும் கிடையாது.எனக்கு தோன்றியதைச் சொல்கிறேன்”
என்கிற பீடிகையோடு பெரியவர் சொல்லத் தொடங்கினார்.

“தமிழின் சிறப்பே ‘ழ’ கரம்தானே! வேறு எந்த பாஷையிலும்
இது கிடையாது. ‘ழ’கரம் வரும் சொற்கள் எல்லாமே
பெரும்பாலும் இனியது. நல்ல பொருள் உடையது.
‘மழலை,குழவி,வாழை,யாழ்,பொழிவு,வியாழன்,சூழல்,ஆழி,
மேழி, ஊழி…’ இப்படி ழ,ழி, வரும் சொற்களை வரிசையாக
சொல்லிக் கொண்டே வந்த பெரியவா,”தம்மிடம் இப்படி
இனிய தன்மை கொண்ட ‘ழ’வை உடையது என்பதால் தமிழ்
என்று வந்துவிட்டதோ” என்று கேட்கவும் கி.வா.ஜ.விடம்
பிரமிப்பு.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

எவ்வளவு ஆழமான பார்வை.கருத்திலும் அசைக்க முடியாத
வலிமையல்லவா? கி.வா.ஜ. அந்த கருத்தை ஏற்றுக்
கொண்டதோடு, இனி நான் பேசும் தமிழ்க் கூட்டங்களில்
இதை எடுத்துச் சொல்வேன் என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories