April 26, 2025, 10:19 AM
33.1 C
Chennai

பைனான்ஸ் அதிரடி வசூல்: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

madurai finance problem women group protest tahsildar
madurai finance problem women group protest tahsildar

மதுரை: அரசு ஆணையை பின்பற்றாத மகளிர் சுயஉதவி பைனான்ஸ் குழுவினரின் அடாவடி வசூல் வேட்டையை முறைப்படுத்த கோஸரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பெண்கள்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி அளிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடனை திருப்பிக் கேட்டு அடாவடி வசூல் செய்வதாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவால் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் அரசே வீட்டு வாடகை முதல் கடன்தொகை வரை வசூல் கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது என அறிவித்தது.

கடந்த ஒரு வார காலமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் தடாலடியாக கடன் கொடுத்த நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வசூலுக்கு வந்து கடனைக் கட்டச் சொல்லி மிரட்டுவதாக பொதுமக்கள் முறையிடுகின்றனர்.

சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் L&T ,மகா சேமம் ,
,கிராமவிடியல் ,ஈஷாப்,ஆசீர்வாதம், வையாலோ, கிராமின் கூட்டம், பெல் , ஸ்டார், வரம், துவாரா உள்ளிட்ட பலவகையான
மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் மகளிருக்கு கடனுதவி வழங்கியுள்ளன

ALSO READ:  ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!
madurai finance problem women group protest tahsildar
madurai finance problem women group protest tahsildar

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல இடங்களில் சரிவர வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் கடன்காரர்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களும் கடன்களை கட்டச் சொல்லி மிரட்டுவதாகவும் பெண்கள் முறையிடுகின்றனர்.

தாங்கள் வேலைக்கு சென்று சாப்பிடுவதற்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் கடனை கட்ட இயலவில்லை என்றும், இன்னும் சிறிது கால அவகாசம் கேட்டால் தரக்குறைவாக பேசுவதாகவும் முறையிடுகின்றனர்.

இதற்கு மாபட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக சாத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியத்திடம் வழங்கினர்.

வட்டாட்சியர் அனைத்து நிதி நிறுவனங்களையும் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பெண்கள் திரும்பிச் சென்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories