பரபரப்பான சூழலில் சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

சென்னை:
அதிமுக.,வில் இருந்து தினகரன் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எழுந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் இன்று சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

முன்னதாக, தினகரன் ஆதரவு தமிழக எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அனுப்பியது தமிழக அரசு. தகுதி நீக்கம் தொடர்பாக முழு விவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் அளித்த பின்னர், 18 இடங்கள் காலியாக உள்ளதாக அரசாணையும் வெளியிட்டது. இதனால், தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.,க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு செப்.20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

ஏற்கெனவே இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனுடன் இவ்வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆளுநர் இன்று தமிழகம் வந்ததும் சட்டசபை கூடும் தேதி அறிவிக்கப் படலாம். சட்டமன்றம் வரும் செப்டம்பர் 21 ம் தேதி கூட்டப்பட உள்ளதாகவும், அன்றைய தினமே அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

ஜனநாயகத்தை மீறி எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். தகுதி நீக்கத்தை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம் என்றும், குடகு விடுதியில் 20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்,  நானும்,கருணாசும் சென்னையில் உள்ளோம் என்று கூறிய வெற்றி வேல், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் பழனிசாமி காவல்துறையை மாமியார் வீடு என்று பேசியிருப்பது அவர் பதவிக்கு சரியானதா ? என்று கேள்வி எழுப்பினார்.

சென்னையில் பரபரப்பு நிலவிய இந்த நேரத்தில், ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் அது தகர்த்தெறியப்படும். தொண்டர்களின் ஆதரவு இருக்கும் வரை கட்சியையோ ஆட்சியையோ தொட்டுக்கூட பார்க்க முடியாது. அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று கூறியுள்ளார் நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒரு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று தமிழகம் வரும் பொறுப்பு ஆளுநரால், பிரச்னைகள் தீருமா அல்லது மேலும் சிக்கலாகுமா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories