மணமான 18 நாளில் மர்ம காய்ச்சலுக்கு காவலர் பலியான சோகம்

IMG 20171003 WA0024 - 2026

திருமணமான 18 நாளில் காவலர் ஒருவர் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ள சம்பவம்
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்களை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. காய்ச்சலால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்
சுகாதரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக
ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர், கொசுவைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பரவலாக மழை பெய்து தண்ணீர்
தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

இது, சுகாதாரத்துறையினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கொசுவைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து
வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம்,
மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராகப் பணியாற்றிய தங்கசாமி இன்று இறந்துள்ளார்.

ஏற்கெனவே, சென்னையில் காய்ச்சலுக்குச் சிகிச்சைக்காக சென்னை அரசு
மருத்துவமனைகளில் சில காவலர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தகவல் தெரிந்ததும்
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இலவசமாக நிலவேம்பு கசாயத்தை வழங்க
ஏற்பாடு செய்தார்.

அதன்பிறகு காய்ச்சலால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை குறைந்தது.
சிறப்பு காவல்படையில் சுகாதார சீர்கேடு காரணமாகக் காய்ச்சல் உள்ளிட்ட
உடல்நலக்குறைவால் பல காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரை லீவ் எடுக்க உயரதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இதனால்
உடல்நலக்குறைவுகளோடு பலர் பணியாற்றிவருகின்றனர்.

இதுகுறித்து சிறப்பு காவல் படை போலீஸார் கூறுகையில், “கடந்த 15-ம் தேதிதான்
தங்கசாமிக்கும் ஆசிரியை அனுசுயாவுக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்துக்காக தங்கசாமி விடுமுறையில் சென்றிருந்தார். திருமணத்துக்குப்
பிறகு சில தினங்களாக தங்கசாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். முதலில்
சாதாரண காய்ச்சல் என்று கருதினோம். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் மதுரைத்
தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது, அவர் மூளைக் காய்ச்சல் காரணமாக
இறந்ததாக மருத்துவமனை தரப்பில் சொல்லப்படுகிறது.

2016-ல்தான் காவலராகப் பணிக்கு தங்கசாமி சேர்ந்தார். அவரது இறப்பு எங்களைச்
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன்பிறகாவது காவலர்கள் உடல் நலத்தில் உயரதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்”
என்றனர் வேதனையுடன்.

செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories