December 6, 2025, 12:58 AM
26 C
Chennai

மணமான 18 நாளில் மர்ம காய்ச்சலுக்கு காவலர் பலியான சோகம்

IMG 20171003 WA0024 - 2025

திருமணமான 18 நாளில் காவலர் ஒருவர் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ள சம்பவம்
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்களை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. காய்ச்சலால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்
சுகாதரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக
ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர், கொசுவைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பரவலாக மழை பெய்து தண்ணீர்
தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

இது, சுகாதாரத்துறையினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கொசுவைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து
வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம்,
மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராகப் பணியாற்றிய தங்கசாமி இன்று இறந்துள்ளார்.

ஏற்கெனவே, சென்னையில் காய்ச்சலுக்குச் சிகிச்சைக்காக சென்னை அரசு
மருத்துவமனைகளில் சில காவலர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தகவல் தெரிந்ததும்
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இலவசமாக நிலவேம்பு கசாயத்தை வழங்க
ஏற்பாடு செய்தார்.

அதன்பிறகு காய்ச்சலால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை குறைந்தது.
சிறப்பு காவல்படையில் சுகாதார சீர்கேடு காரணமாகக் காய்ச்சல் உள்ளிட்ட
உடல்நலக்குறைவால் பல காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரை லீவ் எடுக்க உயரதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இதனால்
உடல்நலக்குறைவுகளோடு பலர் பணியாற்றிவருகின்றனர்.

இதுகுறித்து சிறப்பு காவல் படை போலீஸார் கூறுகையில், “கடந்த 15-ம் தேதிதான்
தங்கசாமிக்கும் ஆசிரியை அனுசுயாவுக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்துக்காக தங்கசாமி விடுமுறையில் சென்றிருந்தார். திருமணத்துக்குப்
பிறகு சில தினங்களாக தங்கசாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். முதலில்
சாதாரண காய்ச்சல் என்று கருதினோம். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் மதுரைத்
தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது, அவர் மூளைக் காய்ச்சல் காரணமாக
இறந்ததாக மருத்துவமனை தரப்பில் சொல்லப்படுகிறது.

2016-ல்தான் காவலராகப் பணிக்கு தங்கசாமி சேர்ந்தார். அவரது இறப்பு எங்களைச்
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன்பிறகாவது காவலர்கள் உடல் நலத்தில் உயரதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்”
என்றனர் வேதனையுடன்.

செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories