எடப்பாடி அணிக்குத் தாவிய… தினகரன் அணியின் ‘அந்த மூன்று’ எம்.பி.,க்கள்!

தினகரன் அணியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் அங்கிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக., அணிக்குத் தாவியுள்ளனர்.  
இன்று காலை அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் சென்னை அதிமுக., தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆட்சிமன்றக் குழுவில் இடம்பிடித்தார்.  ஏற்கெனவே இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ்., இபிஎஸ் தலைமையிலான அணிக்குக் கிடைத்துவிட்டது. இந்நிலையில், அதிமுக., கட்சி அலுவலகமும், கட்சியும் இவர்களால் பயன்படுத்தப் படுகிறது. 
ஏற்கெனவே தங்கள் தரப்புக்கு சின்னமும் கட்சியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்தி வந்தனர் தினகரன் ஆதரவாளர்கள். அவரை நம்பி, 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்ட நிலையில், சபாநாயகர் அவர்களை பதவி நீக்கம் செய்ததும், பின்னர் அவர்கள் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும் அவர்களின் மன உறுதியைக் குலைக்கத்தான் செய்தது. இப்படி அவர்களின் பதவி ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், தினகரன் பின்னால் சென்ற எம்.பி.க்களும் இப்போது தங்கள் நிலை குறித்து சிந்திக்கத் துவங்கி விட்டதாகவே தெரிகிறது. 
இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் தினகரன் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை  எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் ஆகியோர், திடீரென வந்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து எம்.பி.,க்கள் சிலரும் தினகரன் அணியில் இருந்து மனம் மாறி மீண்டும் முதல்வர் இருக்கும் அணியில் இடம் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories