எடப்பாடி அணிக்குத் தாவிய… தினகரன் அணியின் ‘அந்த மூன்று’ எம்.பி.,க்கள்!

தினகரன் அணியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் அங்கிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக., அணிக்குத் தாவியுள்ளனர்.  
இன்று காலை அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் சென்னை அதிமுக., தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆட்சிமன்றக் குழுவில் இடம்பிடித்தார்.  ஏற்கெனவே இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ்., இபிஎஸ் தலைமையிலான அணிக்குக் கிடைத்துவிட்டது. இந்நிலையில், அதிமுக., கட்சி அலுவலகமும், கட்சியும் இவர்களால் பயன்படுத்தப் படுகிறது. 
ஏற்கெனவே தங்கள் தரப்புக்கு சின்னமும் கட்சியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்தி வந்தனர் தினகரன் ஆதரவாளர்கள். அவரை நம்பி, 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்ட நிலையில், சபாநாயகர் அவர்களை பதவி நீக்கம் செய்ததும், பின்னர் அவர்கள் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும் அவர்களின் மன உறுதியைக் குலைக்கத்தான் செய்தது. இப்படி அவர்களின் பதவி ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், தினகரன் பின்னால் சென்ற எம்.பி.க்களும் இப்போது தங்கள் நிலை குறித்து சிந்திக்கத் துவங்கி விட்டதாகவே தெரிகிறது. 
இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் தினகரன் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை  எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் ஆகியோர், திடீரென வந்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து எம்.பி.,க்கள் சிலரும் தினகரன் அணியில் இருந்து மனம் மாறி மீண்டும் முதல்வர் இருக்கும் அணியில் இடம் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. 

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories