February 21, 2026, 5:58 PM
29 C
Chennai

குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்கலாம்!

courtallam-falls
courtallam-falls

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி!

குற்றால அருவிகளில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப் படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் கிருமித் தொற்று காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப் பட்டது. இதனால் இந்த முறை சீஸன் குற்றாலத்தில் களை இழந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் எவரும் இன்றி ஊரே வெறிச்சோடிக் காணப்பட்டது.

அருவிகளிலும் யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தற்போது, மண்டல பூஜை கால ஐயப்ப சீஸன் சபரிமலைக்கு மாலை அணிந்து வருபவர்கள் குற்றாலத்தில் அருவிகளில் குளித்து பூஜை செய்து பின்னர் சபரிமலை செல்வர் இந்த முறை சபரிமலைக்கு குறிப்பிட்ட அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே சபரிமலை பக்தர்கள் குறைவாகவே வருகின்றனர்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் நாளை முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பொது மக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றுக்கு செல்லலாம்.

ஒரே நேரத்தில் எத்தனை பேர் சென்றாலும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்.

2 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தவேண்டும் உள்ளிட்ட அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், குற்றால அருவிகள் அனைத்திலும் 15 ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories